/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
திண்டுக்கல்லுக்கு சட்டசபை பேரவை ஏடுகள் குழு வருகை
/
திண்டுக்கல்லுக்கு சட்டசபை பேரவை ஏடுகள் குழு வருகை
ADDED : ஆக 28, 2024 06:08 AM
திண்டுக்கல், : சட்டசபை பேரவையின் ஏடுகள் குழு இன்று, நாளை என இரு நாட்கள் திண்டுக்கல் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொள்கிறது.
பேரவையின் ஏடுகள் குழு தலைவர் லட்சுமணன் தலைமையில் உறுப்பினர்களான் ராதாகிருஷ்ணன் நகர் எம்.எல்.ஏ., எபினேசர், வால்பாறை எம்.எல்.ஏ., அமுல்கந்தசாமி, சிதம்பரம் எம்.எல்.ஏ., பாண்டியன் ஆகியோருடன் செயலக அலுவலர்கள் ஆய்வினை மேற்கொள்கின்றனர்.
இன்று, பழநியில் நடக்கும் முருகன் மாநாடு கண்காட்சியை பார்வையிடும் குழு ரெட்டியார்சத்திரத்தில் கலைஞரின் கனவு இல்லம் பணிகளை ஆய்வு செய்கிறது.
தொடர்ந்து திண்டுக்கல் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.
நாளை கொடைக்கானலில் வளர்ச்சிப்பணிகளை பார்வையிட்டுகின்றனர். மூலிகை பண்ணைகள், மூலிகை மருந்து கழகத்தின் ஆண்டறிக்கைகள், மின் விசை நிதி , மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் , ஊரக வீட்டுவசதி உட்கட்டமைப்பு வசதி மேம்பாட்டுக் கழகம் ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்,

