தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ தேவாலயங்களில் ஈஸ்டர் தின நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை

தேவாலயங்களில் ஈஸ்டர் தின நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை

தேவாலயங்களில் ஈஸ்டர் தின நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை


ADDED : ஏப் 21, 2025 07:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 21, 2025 07:58 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தர்மபுரி: ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு, நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனையில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு, உயிர்ப்பு பெற்ற ஈஸ்டர் பெருநாளை கொண்டாடும் வகையில், 40 நாட்கள் தவக்காலமாக கிறிஸ்தவர்கள் கடைபிடித்து வந்தனர். கடந்த, 18 அன்று ஏசுவின் சிலுவைப்பாடுகளை நினைவு கூரும் புனித வெள்ளி கடைபிடிக்கப்பட்டது. அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும், ஏசுவின் சிலுவைபாடுகள் தியானிக்கப்பட்டு, ஆராதனைகள் நடத்தப்பட்டன.

நேற்று, ஏசுவின் உயிர்ப்பை நினைவு கூரும் ஈஸ்டர் பெருநாள் நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன்தினம் நள்ளிரவு, 12:00 மணிக்கு பாரதிபுரத்திலுள்ள துாய இருதய ஆண்டவர் பேராலயத்தில் சிறப்பு திருப்பலி மற்றும் பிரார்த்தனை நடந்தது. இதில், திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us