/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
'ஒரு கிராமம், ஒரு பயிர் திட்டம்' அமல் உதவி வேளாண் அலுவலர் தகவல்
/
'ஒரு கிராமம், ஒரு பயிர் திட்டம்' அமல் உதவி வேளாண் அலுவலர் தகவல்
'ஒரு கிராமம், ஒரு பயிர் திட்டம்' அமல் உதவி வேளாண் அலுவலர் தகவல்
'ஒரு கிராமம், ஒரு பயிர் திட்டம்' அமல் உதவி வேளாண் அலுவலர் தகவல்
ADDED : ஏப் 19, 2024 06:55 AM
தர்மபுரி : தர்மபுரி வட்டாரத்தில், 'ஒரு கிராமம், ஒரு பயிர் திட்டம்' அமல்படுத்தப்பட்டுள்ளது.இது குறித்து, தர்மபுரி வேளாண் உதவி இயக்குனர் இளங்கோவன் வெளியிட்ட அறிக்கை:
தர்மபுரி வட்டாரத்தில், வேளாண் பயிர்கள் சாகுபடி செய்யப்படும் வருவாய் கிராமங்களில், வேளாண் உதவி அலுவலர்கள் மூலம், 'ஒரு கிராமம், ஒரு பயிர் திட்டம்' செயல்படுத்தப்பட உள்ளது. அதன்படி, ஒவ்வொரு வருவாய் கிராமத்திலும், அதிகமாக சாகுபடி செய்யப்படும் பயிரில், 5 முதல், 10 ஏக்கர் பரப்பளவில் செயல் விளக்கம் அளிக்கப்பட உள்ளது. அதில் திடல் அமைத்து, தேர்ந்தெடுக்கப்பட்ட பயருக்கான நிலம் தயாரிப்பு, உயர் விளைச்சலுக்கான ரகங்கள், விதை நேர்த்தி, விதை விதைப்பு, ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் மேலாண்மை முறைகள் குறித்து விளக்கம் அளிக்கப்படும். மேலும், மண் பரிசோதனையின் அடிப்படையில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை தொழில்நுட்பங்களையும், இச்செயல் விளக்க திடலில் செயல்படுத்தப்படும். இங்கு நடக்கும் அனைத்து தொழில்நுட்பங்களையையும், அக்கிராமத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் கண்டறிந்து, விழிப்புணர்வு பெற வேண்டும். விவசாயிகள் குறைந்தபட்சம், 15 சதவீதம் முதல், 20 சதவீதம் வரை கூடுதல் உற்பத்தி பெற வேண்டும் என்பது இத்திட்டத்தின் நோக்கம். இத்திட்டம், தர்மபுரி மாவட்டத்திலுள்ள வருவாய் கிராமங்களில், 5 வேளாண் உதவி அலுவலர்கள் மூலம் செயல்படுத்தப்பட உள்ளது.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

