/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
குப்பை கிடங்காக கோணான் ஏரி துார்வார விவசாயிகள் கோரிக்கை
/
குப்பை கிடங்காக கோணான் ஏரி துார்வார விவசாயிகள் கோரிக்கை
குப்பை கிடங்காக கோணான் ஏரி துார்வார விவசாயிகள் கோரிக்கை
குப்பை கிடங்காக கோணான் ஏரி துார்வார விவசாயிகள் கோரிக்கை
ADDED : மே 02, 2025 02:15 AM
மொரப்பூர்:
மொரப்பூர், கோணான் ஏரியில் குப்பை கொட்டுவதை தடுப்பதுடன், அதை துார்வார நடவடிக்கை எடுக்க, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டம், மொரப்பூரில், கோணான் ஏரி உள்ளது. இந்த ஏரி நிரம்புவதன் மூலம், சுற்று வட்டாரப் பகுதிகளிலுள்ள விவசாய கிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணறுகளின் நிலத்தடி நீர் மட்டமும் உயர்ந்தது. இந்நிலையில், ஏரிக்கு தண்ணீர் நீர்வரத்து கால்வாய்கள் முறையாக துார்வாரப்படாமல் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன.
மேலும், சீமை கருவேல மரங்கள் வளர்ந்துள்ளதால், ஏரிக்கு தண்ணீர் வருவதில்லை. இதனால், அருகிலுள்ள விவசாய கிணறுகள் வறண்டு, விவசாயம் பாதித்துள்ளது.
இந்நிலையில், மொரப்பூர் பஞ்.,ல், தினமும், சேகரிக்கப்படும் குப்பை மற்றும் இறைச்சி கடைகளில் இருந்து கொண்டு வரப்படும் கோழி கழிவுகள் ஏரியில் கொட்டப்படுவதால், மலை போல் குவிந்துள்ளது. மேலும், அவற்றிற்கு தீ வைக்கப்பட்டு எரிக்கப்படுகிறது. விவசாயிகளின் நலன் கருதி, ஏரியில் குப்பை கொட்டுவதை தடுப்பதுடன், ஏரியிலுள்ள சீமை கருவேல மரங்களை அகற்றி, துார்வார மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

