sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

குப்பை கிடங்காக கோணான் ஏரி துார்வார விவசாயிகள் கோரிக்கை

/

குப்பை கிடங்காக கோணான் ஏரி துார்வார விவசாயிகள் கோரிக்கை

குப்பை கிடங்காக கோணான் ஏரி துார்வார விவசாயிகள் கோரிக்கை

குப்பை கிடங்காக கோணான் ஏரி துார்வார விவசாயிகள் கோரிக்கை


ADDED : மே 02, 2025 02:15 AM

Google News

ADDED : மே 02, 2025 02:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மொரப்பூர்:

மொரப்பூர், கோணான் ஏரியில் குப்பை கொட்டுவதை தடுப்பதுடன், அதை துார்வார நடவடிக்கை எடுக்க, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தர்மபுரி மாவட்டம், மொரப்பூரில், கோணான் ஏரி உள்ளது. இந்த ஏரி நிரம்புவதன் மூலம், சுற்று வட்டாரப் பகுதிகளிலுள்ள விவசாய கிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணறுகளின் நிலத்தடி நீர் மட்டமும் உயர்ந்தது. இந்நிலையில், ஏரிக்கு தண்ணீர் நீர்வரத்து கால்வாய்கள் முறையாக துார்வாரப்படாமல் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன.

மேலும், சீமை கருவேல மரங்கள் வளர்ந்துள்ளதால், ஏரிக்கு தண்ணீர் வருவதில்லை. இதனால், அருகிலுள்ள விவசாய கிணறுகள் வறண்டு, விவசாயம் பாதித்துள்ளது.

இந்நிலையில், மொரப்பூர் பஞ்.,ல், தினமும், சேகரிக்கப்படும் குப்பை மற்றும் இறைச்சி கடைகளில் இருந்து கொண்டு வரப்படும் கோழி கழிவுகள் ஏரியில் கொட்டப்படுவதால், மலை போல் குவிந்துள்ளது. மேலும், அவற்றிற்கு தீ வைக்கப்பட்டு எரிக்கப்படுகிறது. விவசாயிகளின் நலன் கருதி, ஏரியில் குப்பை கொட்டுவதை தடுப்பதுடன், ஏரியிலுள்ள சீமை கருவேல மரங்களை அகற்றி, துார்வார மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us