/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
வெட்டுக்கூலி, உரம் விலை ஆண்டுதோறும் உயர்வு; கரும்பு டன்னுக்கு ரூ.4,000 வழங்க வலியுறுத்தல்
/
வெட்டுக்கூலி, உரம் விலை ஆண்டுதோறும் உயர்வு; கரும்பு டன்னுக்கு ரூ.4,000 வழங்க வலியுறுத்தல்
வெட்டுக்கூலி, உரம் விலை ஆண்டுதோறும் உயர்வு; கரும்பு டன்னுக்கு ரூ.4,000 வழங்க வலியுறுத்தல்
வெட்டுக்கூலி, உரம் விலை ஆண்டுதோறும் உயர்வு; கரும்பு டன்னுக்கு ரூ.4,000 வழங்க வலியுறுத்தல்
ADDED : டிச 17, 2025 08:03 AM

அரூர்: வெட்டுக்கூலி, உரம் விலை உள்ளிட்டவை ஆண்டுதோறும் உயர்ந்து வரும் நிலையில், குறைந்தபட்சம் கரும்பு டன் ஒன்-றுக்கு, 4,000 ரூபாய் வழங்க வேண்டும் என, விவசாயிகள் வலியு-றுத்தி உள்ளனர்.
தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த கோபாலபுரம் சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலையில், நடப்பாண்டுக்கான கரும்பு அரவை நேற்று முன்தினம் துவங்கியது. நடப்பு அரவைக்கு, 7,342.55 ஏக்கரில் பதிவு செய்யப்பட்ட கரும்பு, 2.35 லட்சம் மெட்ரிக் டன் அரவை செய்ய இலக்கு திட்டமிடப்பட்டு கரும்பு வெட்டும் பணி நடக்கிறது. இந்நிலையில் கரும்புக்கான அரசின் கொள்முதல் விலை குறைவாக உள்ளதால், விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. எனவே, தி.மு.க., தேர்தல் வாக்குறுதிபடி, கரும்பு டன் ஒன்றுக்கு, 4,000 ரூபாய் வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
இது குறித்து, பா.ஜ., மாநில விவசாய அணி செயற்குழு உறுப்-பினர் குழந்தை ரவி கூறியதாவது: ஏற்கனவே, வேர்ப்புழு தாக்குதலால் கரும்பு பாதிக்கப்பட்டு தோட்டத்தில் காய்ந்துள்ளன. இதனால் கரும்புச்சாறு குறைந்து, எடை மற்றும் அதன் தரம் குறைவதுடன், விவசாயிகளுக்கு பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது. இந்நிலையில், ஒரு டன்-னுக்கு, 1,000 முதல், 1,500 ரூபாய் வரை வெட்டுக் கூலி வழங்-கப்படுவதுடன், தொழிலாளர்கள் சென்று வர வாடகை வாக-னமும் ஏற்பாடு செய்ய வேண்டும். ஆனால், ஆலை நிர்வாகம் டன் ஒன்றுக்கு, 3,612.28 ரூபாய் வழங்குவதாக அறிவித்துள்ளது.
உழவு செய்தல், கரும்பு நடவு, களை எடுத்தல், தோகை எடுத்தல் உள்ளிட்ட பராமரிப்பு செலவு மற்றும் வெட்டுக்கூலி, உரம், பூச்சிமருந்து ஆகியவற்றின் விலை ஆண்டுதோறும் உயர்ந்து வருகிறது. ஆனால், கரும்பின் கொள்முதல் விலை உயர்த்தி வழங்கப்படவில்லை. இவற்றை கணக்கிட்டால் விவசா-யிகளுக்கு நஷ்டம் தான் ஏற்படுகிறது. இதனால் கரும்பு விவசா-யிகள் கவலை அடைந்துள்ளனர்.
சில மாதங்களுக்கு முன், சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை அரவைக்கு கரும்பு பதிவு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்த ஆலை நிர்வாகம், நடப்பாண்டு கரும்பு டன் ஒன்றுக்கு, 4,000 ரூபாய் கிடைக்க வாய்ப்புள்ளது என கூறியது. மேலும், தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் கரும்பு டன் ஒன்றுக்கு, 4,000 ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டுகளுக்கு மேலாகியும், தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. எனவே கரும்பு விவசாயி-களின் நலனை கருத்தில் கொண்டு, தற்போதைய அரவை பரு-வத்தில், கரும்பு டன் ஒன்றுக்கு, 4,000 ரூபாய் வழங்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

