/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பாறை உருண்டு விழுந்து 10 வயது சிறுவன் பலி
/
பாறை உருண்டு விழுந்து 10 வயது சிறுவன் பலி
ADDED : மே 27, 2024 06:58 AM
பென்னாகரம் :ஒகேனக்கல் அருகே, தடுப்பணை ஓடையில் விளையாடியபோது, பாறை உருண்டு விழுந்ததில் சிறுவன் பலியானான்.
தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் அருகே ஊட்டமலையை சேர்ந்த பார்த்திபன் மற்றும் சவுந்தர்யா தம்பதியின் மகன்கள் பவின், 10, சுதீப், 8. இருவரும் நேற்று ஊட்டமலை முனியப்பன் கோவில் அருகே உள்ள தடுப்பணை ஓடையில் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது, திடீரென நிலச்சரிவு ஏற்பட்டு பாறைகள் உருண்டு சிறுவர்கள் மீது விழுந்தது. இதில், படுகாயமடைந்த சிறுவர்கள் இருவரையும், அருகில் இருந்தவர்கள் மீட்டு, உடனடியாக பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில், பவின் உயிரிழந்தான். சுஜித் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான். ஒகேனக்கல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

