ADDED : ஜன 25, 2025 01:49 AM
அ நிறம் | அளவு
அரூர்,: தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த சித்தேரி மலை பஞ்.,க்கு உட்பட்ட மண்ணுாரைச் சேர்ந்தவர் சாமுவேல், இவரது மனைவி கலைச்செல்வி, 26. இவர்களது மகள் ஆராதனா, 3. கடந்த, 21ல் சாமுவேல் நிலத்தில் வெட்டப்பட்டிருந்த சிறிய குழியில் குழந்தை விழுந்துள்ளது. அதில், தேங்கியிருந்த தண்ணீரில் மூழ்கி ஆராதனா
உயிரிழந்துள்ளார். தொடர்ந்து குழந்தையை பெற்றோர் அடக்கம் செய்துள்ளனர். இது குறித்து சித்தேரி வி.ஏ.ஓ., தினகரன் அளித்த புகார்படி, அரூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
