/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வாரிசு சான்றுக்கு ரூ.4,500 லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., கைது
/
வாரிசு சான்றுக்கு ரூ.4,500 லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., கைது
வாரிசு சான்றுக்கு ரூ.4,500 லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., கைது
வாரிசு சான்றுக்கு ரூ.4,500 லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., கைது
ADDED : பிப் 03, 2024 01:25 AM

பெண்ணாடம்:கடலுார் மாவட்டம், பெண்ணாடம் அடுத்த முருகன்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் மணிமொழி, 80. முதியார் உதவித் தொகை பெறுவதற்காக, இரண்டு மாதங்களுக்கு முன் வாரிசு சான்று கோரி விண்ணப்பித்தார். அந்த மனுவை பரிசீலித்த துறையூர் வி.ஏ.ஓ., சம்பத்குமார், 4,500 ரூபாய் கொடுத்தால் உடனே சான்றிதழ் வழங்குவதாக கூறினார்.
அதிர்ச்சி அடைந்த மணிமொழி, கடலுார் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். போலீசார் அறிவுரையின் படி, நேற்று பகல் 2:00 மணிக்கு, துறையூர் வி.ஏ.ஓ., அலுவலகத்திற்கு சென்ற மணிமொழி, போலீசார் வழங்கிய ரசாயன பவுடர் தடவிய பணத்தை கொடுத்தார். அதை வாங்கிய வி.ஏ.ஓ., சம்பத்குமாரை, போலீசார் கையும் களவுமாக கைது செய்து, பணத்தை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, அவர் வீட்டிலும் சோதனை நடத்தினர்.

