sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

வேளாண் அடுக்கக திட்டத்தில் பதிவு செய்ய 30ம் தேதி கடைசி

/

வேளாண் அடுக்கக திட்டத்தில் பதிவு செய்ய 30ம் தேதி கடைசி

வேளாண் அடுக்கக திட்டத்தில் பதிவு செய்ய 30ம் தேதி கடைசி

வேளாண் அடுக்கக திட்டத்தில் பதிவு செய்ய 30ம் தேதி கடைசி


ADDED : ஏப் 25, 2025 05:11 AM

Google News

ADDED : ஏப் 25, 2025 05:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெல்லிக்குப்பம்: வேளாண் அடுக்கக திட்டத்தின் கீழ் விவசாயிகள் தரவு உருவாக்கும் பணிக்கு பணிக்கு வரும் 30ம் தேதி கடைசி நாளாகும்.

இதுகுறித்து அண்ணாகிராமம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சுரேஷ் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: அண்ணாகிராமம் ஒன்றியத்தில் உள்ள 45 வருவாய் கிராமங்களில் வேளாண் அடுக்கக திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த விவசாயிகள் தரவு உருவாக்கும் பணி நடந்து வருகிறது. விவசாயிகளின் நில உடமைகள் ஆதாருடன் இணைக்கப்படுகிறது. கிராம அளவில் பணியாற்றும் சமுதாய வளமைய பயிற்றுனர்கள், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், பொது சேவை மையங்களில் இப்பணி நடக்கிறது.

இதற்கு சமீபத்தில் எடுக்கப்பட்ட சிட்டா, அடங்கல், ஆதார் நகல், ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் ஆகியவற்றை எடுத்து செல்ல வேண்டும். இதன் மூலம் ஒவ்வொரு விவசாயிக்கும் தனி குறியீடு எண் வழங்கப்படும்.

இந்த எண் பெற்ற விவசாயிகள் மட்டும் மத்திய, மாநில அரசின் நலத்திட்ட உதவிகளை பெற முடியும். தரவு உருவாக்கும் பணிக்கு வரும் 30ம் தேதி கடைசி நாளாகும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us