ADDED : ஆக 15, 2025 03:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: சஷ்டியையொட்டி, விருத்தாசலம் பகுதியில் உள்ள கோவில்களில் முருகன் சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் உள்ள வள்ளி தெய்வானை சமேத சண்முக சுப்ரமணியர், 28; ஆகம சன்னதியில் உள்ள குமரேச சுவாமிகளுக்கு சிறப்பு அபிேஷக, ஆராதனை நடந்தது.
அதேபோல், மணவாளநல்லுார் கொளஞ்சியப்பர் கோவிலில் சித்தி விநாயகர் சுவாமிக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட திரவிய பொருட்களால் சிறப்பு அபிேஷகம் நடந்தது.
அதைத்தொடர்ந்து, சித்தி விநாயகர், கொளஞ்சியப்பர் சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில், ஏராளமானோர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
அதேபோல், மணலுார் ஆதி கொளஞ்சியப்பர், மங்கலம்பேட்டை பால தண்டாயுதபாணி கோவில்களில் சஷ்டி வழிபாடு நடந்தது.

