sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

குரங்குகள் அட்டகாசம்: பிடிக்க நடவடிக்கை தேவை

/

குரங்குகள் அட்டகாசம்: பிடிக்க நடவடிக்கை தேவை

குரங்குகள் அட்டகாசம்: பிடிக்க நடவடிக்கை தேவை

குரங்குகள் அட்டகாசம்: பிடிக்க நடவடிக்கை தேவை


ADDED : பிப் 26, 2024 05:49 AM

Google News

ADDED : பிப் 26, 2024 05:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சத்திரம்: புதுச்சத்திரம் அடுத்த சேந்திரக்கிள்ளையில் சுமார் 2000 க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

இப்பகுதியில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. கடந்த சில மாதங்களாக இப்பகுதியில் 30 க்கும் மேற்பட்ட குரங்குகள் அட்டகாசம் செய்து வருகின்றன.

இந்த குரங்குகள் நிலத்தில் பயிரிட்டுள்ள வேர்க்கடலை, காய்கறிகள் செடிகள் உள்ளிட்ட பயிர்களை பிடுங்கி சேதப்படுத்துகின்றன. மேலும் வீட்டுத்தோட்டத்தில் வைத்துள்ள தென்னை மரங்கள், கொய்யா மரங்கள், வாழை மரங்கள், நெல்லி மரங்களில் உள்ள காய்களை பறித்து சேதப்படுத்துகின்றன.

அதுமட்டுமின்றி வீடுகளின் உள்ளே புகுந்து, உணவு பொருட்களை கீழே கொட்டி சேதப்படுத்துவது வாடிக்கையாகி வருகிறது.

குரங்குகளை துரத்தும் பொதுமக்களை கடிக்க பாய்வதால் பொதுமக்கள் அச்சத்துடன் வசித்து வருகின்றனர்.

எனவே இப்பகுதி மக்கள் நலனை கருத்தில்கொண்டு, வனத்துறை அதிகாரிகள் சேந்திரக்கிள்ளை பகுதியில் அட்டகாசம் செய்து வரும், குரங்குகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us