sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

வாகனங்களை வாடகைக்கு எடுத்த அடமானம் வைத்து பல லட்சம் மோசடி குறிஞ்சிப்பாடியில் நான்கு பேர் கைது

/

வாகனங்களை வாடகைக்கு எடுத்த அடமானம் வைத்து பல லட்சம் மோசடி குறிஞ்சிப்பாடியில் நான்கு பேர் கைது

வாகனங்களை வாடகைக்கு எடுத்த அடமானம் வைத்து பல லட்சம் மோசடி குறிஞ்சிப்பாடியில் நான்கு பேர் கைது

வாகனங்களை வாடகைக்கு எடுத்த அடமானம் வைத்து பல லட்சம் மோசடி குறிஞ்சிப்பாடியில் நான்கு பேர் கைது


ADDED : நவ 16, 2024 02:32 AM

Google News

ADDED : நவ 16, 2024 02:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குள்ளஞ்சாவடி: சரக்கு வாகனங்களை அடமானம் வைத்து பல லட்சம் மோசடி செய்த, 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

குள்ளஞ்சாவடி அடுத்த சமட்டிக்குப்பம், கிழக்கு தெருவை சேர்ந்தவர், சரவணன் மகன் சதீஷ்குமார், 26; குறிஞ்சிப்பாடி, பெரிய கண்ணாடியை சேர்ந்தவர் கவுதமன் , 34: இவர் சதீஷ்குமாருக்கு சொந்தமான அசோக் லேலண்ட்-தோஸ்த் சரக்கு வாகனத்தை, தனியார் நிறுவனம் ஒன்றில் ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு அமர்த்துவதாக கூறி மாத வாடகைக்கு எடுத்துள்ளார். இவர் இது போன்று மேலும் 5 பேரிடம் வாகனங்களை வாடகைக்கு எடுத்துள்ளார்.

இந்நிலையில் கவுதமன் , வடலுார் ஆர்.சி ., தெருவை சேர்ந்த ஜான் விக்டர், 42, குறிஞ்சிப்பாடி, ஆடூர் கண்ணாடியை சேர்ந்த, சிவராஜ், 35, ஜி.என் குப்பம், ராணி தெருவை சேர்ந்த சிவராமன், 35, ஆகியோருடன் சேர்ந்து போலி ஆவணங்கள் தயார் செய்து, 6 தோஸ்த் வாகனங்களை அடமானம் வைத்து மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

இது பற்றி அறிந்த சதீஷ்குமார் உட்பட பாதிக்கப்பட்ட 6 பேர் கொடுத்த புகாரின் பேரில் குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்குப் பதிந்து கவுதமன் உள்ளிட்ட 4 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us