sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 21, 2025 ,மார்கழி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ஆக்கிரமிப்பு அகற்றும் விவகாரம்; கலெக்டரிடம் வியாபாரிகள் மனு

/

ஆக்கிரமிப்பு அகற்றும் விவகாரம்; கலெக்டரிடம் வியாபாரிகள் மனு

ஆக்கிரமிப்பு அகற்றும் விவகாரம்; கலெக்டரிடம் வியாபாரிகள் மனு

ஆக்கிரமிப்பு அகற்றும் விவகாரம்; கலெக்டரிடம் வியாபாரிகள் மனு


ADDED : மார் 06, 2024 03:00 AM

Google News

ADDED : மார் 06, 2024 03:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : சேத்தியாத்தோப்பு பேரூராட்சியில் சரியாக அளந்து ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டுமென, வியாபாரிகள் மனு அளித்தனர்.

இதுகுறித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மண்டல தலைவர் சண்முகம் தலைமையில், சேத்தியாத்தோப்பு அனைத்து வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் அளித்த மனு:

சேத்தியாத்தோப்பு பேரூராட்சி கடைவீதியில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் 43 கடைகள் மற்றும் குடியிருப்புகள் உள்ளதாக நெடுஞ்சாலைத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கு பல ஆண்டுகளாக வீட்டு வரி, தொழில் வரி செலுத்தி தொழில் செய்து வருகிறோம். இப்பகுதியை சரியாக அளக்காமல் நெடுஞ்சாலைத்துறையின் இடத்தை ஆக்கிரமிப்பு செய்து இருப்பதாக நெடுஞ்சாலைத் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், வியாபார தொழிலை நம்பியுள்ள எங்களின் குடும்பங்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. எனவே, இப்பகுதியை முறையாக அளந்து ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us