sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 03, 2026 ,மார்கழி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

வளர்ச்சி திட்ட பணிகள் சேர்மன் துவக்கி வைப்பு

/

வளர்ச்சி திட்ட பணிகள் சேர்மன் துவக்கி வைப்பு

வளர்ச்சி திட்ட பணிகள் சேர்மன் துவக்கி வைப்பு

வளர்ச்சி திட்ட பணிகள் சேர்மன் துவக்கி வைப்பு


ADDED : நவ 17, 2024 02:45 AM

Google News

ADDED : நவ 17, 2024 02:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநத்தம்: ஆவட்டி அருகே பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மங்களூர் ஒன்றிய சேர்மன் துவக்கி வைத்தார்.

ஆவட்டி அடுத்த ம.புடையூர் ஊராட்சியில் பகுதி நேர ரேஷன் கடை, இடுகாட்டில் காத்திருப்போர் கூடம், விழா மேடை அமைத்து தர வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்று ம.புடையூர் ஊராட்சிக்கு உட்பட்ட சோழபுரம் கிராமத்தில் பகுதி நேர ரேஷன் கடை துவக்க நிகழ்ச்சி நடந்தது.

ஊராட்சி தலைவர் வாசுதேவன் தலைமை தாங்கினார். மங்களூர் ஒன்றிய சேர்மன் சுகுணா சங்கர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று ரேஷன் கடையை திறந்து வைத்தார்.

மேலும், ம.புடையூர் ஊராட்சியில் இடுகாடு காத்திருப்போர் கூடம் மற்றும் விழா மேடை கட்டுமான பணிகளை பூமி பூஜையுடன் துவக்கி வைத்தார்.

இதில், ம.புடையூர் வேளாண் கூட்டுறவு வங்கி செயலர் தமிழரசன், ஊராட்சி துணை தலைவர் லதா சரவணன், தி.மு.க., நிர்வாகிகள் வெங்கடேசன், அழகுசாமி, ராமதாஸ், வி.சி., நிர்வாகி காசி கணேசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us