/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மீன்பிடி வலை சேதம் ஒருவர் மீது வழக்கு
/
மீன்பிடி வலை சேதம் ஒருவர் மீது வழக்கு
ADDED : ஜூலை 30, 2025 07:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிள்ளை : மீன்பிடி வலையை சேதப்படுத்தியவரை போலீசார் தேடி வருகின்றனர்.
கிள்ளை அடுத்த முடசல் ஓடை கிராமத்தைச் சேர்ந்தவர் அருள், 38; இவருக்கும் அதே பகுதி யை சேர்ந்த பிரகாஷிற்கும் முன்விரோதம் உள்ளது. இந்நிலையில், கடந்த 22ம் தேதி கடலில் அருள் மீன் பிடிக்கும்போது, அவரின் மீன்பிடி வலையை பிரகாஷ் சேதப்படுத்தினார்.
இதை, அருள் தட்டிக்கேட்டதால் தக ராறு ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த பிரகாஷ், அருளுக்கு கொலை மிரட்டல் விடுத்தார். புகாரின்பேரில், கிள்ளை சப் இன்ஸ்பெக்டர் மகேஷ் வழக்குப் பதிந்து, பிரகாஷை, தேடி வருகிறார்.

