ADDED : டிச 26, 2025 06:47 AM

அ நிறம் | அளவு
சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் மாணவிகள், கீரப்பாளையம் கிராமத்தில் தங்கி பயிற்சி பெறும் திட்ட துவக்க விழா நடந்தது.
துறை தலைவர் தமிழ்செல்வி, குழு ஆசிரியர் துரைராஜ் வழிகாட்டுதலின்படி, கீரப்பாளையம் ஒன்றிய அலுவலகத்தில் நடந்த விழாவில் மாணவிகள் குழு தலைவி ஜான்சி ராணி தலைமை தாங்கினார்.
மாணவி இந்துஜா வரவேற்றார். கீரப்பாளையம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பார்த்திபன், ஆனந்தன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று பேசினர்.
நிகழ்ச்சியில், வி.ஏ.ஓ.,கலைச்செல்வி, ஊராட்சி செயலர் முருகவேல், வேளாண் மாணவிகள் ஹரிஷ்ராகவி, ஹர்ஷல் ஸ்மித்தா, ஹர்ஷவர்த்தினி, ஹேமாவர்ஷினி, ஹேமலதா, ஹேமநந்தினி, இசை மொழி, ஜனனி, ஜான்சி ராணி, ஜெயஹரிணி, ஜெயந்தி மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.
துணை தலைவி ஹர்ஷினி நன்றி கூறினார்.
