/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பண்ருட்டியில் விதிமீறலால் போக்குவரத்து நெரிசல்
/
பண்ருட்டியில் விதிமீறலால் போக்குவரத்து நெரிசல்
ADDED : ஏப் 25, 2024 03:55 AM
நடுவீரப்பட்டு: பண்ருட்டி நகரில் போக்குவரத்து விதிமீறல் அதிகரிப்பால், நகரில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
பண்ருட்டி நகரை சுற்றி ஏராளமான கிராமங்கள் உள்ளன. இப்பகுதியை சேர்ந்தவர்கள் அன்றாட தேவையான மளிகை, காய்கறிகள் வாங்க தினமும் அதிக அளவில் பண்ருட்டிக்கு வந்து செல்கின்றனர்.
இதனால் பண்ருட்டி நான்கு முனை சந்திப்பு, மார்கெட் பகுதியில் எப்போதும் மக்கள் கூட்டம் மற்றும் வாகன போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும்.
இப்பகுதியில் போக்குவரத்து போலீசார் நியமிக்கப்பட்டு, போக்குவரத்து சீரமைப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனாலும், வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை மதிப்பதில்லை. சாலையிலேயே வாகனங்களை நிறுத்திக் கொள்கின்றனர்.
இதனால், நான்கு முனை சந்திப்பில் எந்த சாலையிலும் வாகனங்கள் எளிதாக செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ராஜாஜி சாலை உட்பட நகரில் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
எனவே, பண்ருட்டியில் கூடுதலாக போக்குவரத்து போலீசாரை நியமித்து, போக்குவரத்த சீரமைப்பது மற்றும் விதிமீறுவோர் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, பண்ருட்டியில் போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு தீர்வு காண முடியும்.

