/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கோவில் முன் சிறுநீர் கழித்த ஏட்டு மாற்றம்
/
கோவில் முன் சிறுநீர் கழித்த ஏட்டு மாற்றம்
ADDED : செப் 13, 2024 02:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்:கடலுார் மாவட்டம், விருத்தாசலம் போலீஸ் ஸ்டேஷனில் தலைமைக் காவலராக பணிபுரிபவர் பாக்கியராஜ்.
இவர், நேற்று முன்தினம் இரவு போதையில், பைக்கில் விருத்தகிரீஸ்வரர் கோவில் பகுதிக்கு வந்தார்.
கோவில் கிழக்கு கோபுர வாயிலின் முன், சாலை நடுவே பைக்கை நிறுத்திவிட்டு, அங்கேயே நின்று சிறுநீர் கழித்தார்.
நிதானம் இழந்திருந்த அவர், கோவில் அருகே உள்ள நடைபாதையில் படுத்து விட்டார்.
இது தொடர்பான வீடியோ நேற்று பரவியது.
இதையறிந்த, எஸ்.பி., ராஜாராம், விசாரணை நடத்தி, பாக்கியராஜை ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டார்.

