sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 15, 2025 ,கார்த்திகை 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கோவில் முன்பு சிறுநீர் கழித்த போதை ஏட்டு அதிரடி மாற்றம்

/

கோவில் முன்பு சிறுநீர் கழித்த போதை ஏட்டு அதிரடி மாற்றம்

கோவில் முன்பு சிறுநீர் கழித்த போதை ஏட்டு அதிரடி மாற்றம்

கோவில் முன்பு சிறுநீர் கழித்த போதை ஏட்டு அதிரடி மாற்றம்


ADDED : செப் 13, 2024 06:17 AM

Google News

ADDED : செப் 13, 2024 06:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவில் முன்பு, போதையில் சிறுநீர் கழித்த போலீஸ் ஏட்டு ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார்.

கடலுார் மாவட்டம், விருத்தாசலம் போலீஸ் ஸ்டேஷனில் தலைமைக் காவலராக பணிபுரிபவர் பாக்கியராஜ். இவர், நேற்று முன்தினம் இரவு போதையில், பைக்கில் விருத்தகிரீஸ்வரர் கோவில் பகுதிக்கு வந்துள்ளார்.

கோவில் கிழக்கு கோபுர வாயிலின் முன்பு, சாலையில் நடுவே பைக்கை நிறுத்தி விட்டு, அங்கேயே நின்று சிறுநீர் கழித்துள்ளார்.

அதன்பின், நிதானம் இழந்த அவர், கோவில் அருகே உள்ள நடைபாதை யில் படுத்துவிட்டார். இது சம்பந்தமான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.

இதையறிந்த, எஸ்.பி., ராஜாராம், விசாரணை நடத்தி, பாக்கியராஜை ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us