/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ரயில் பாதையில் கிடந்த வாலிபர் உடல் அடக்கம்
/
ரயில் பாதையில் கிடந்த வாலிபர் உடல் அடக்கம்
ADDED : ஏப் 26, 2024 05:34 AM
விருத்தாசலம்: உளுந்துார்பேட்டை அருகே ரயில் பாதையில் இறந்து கிடந்த வாலிபரின் உடல், உறவினர்கள் ஒப்புதலுடன் அடக்கம் செய்யப்பட்டது.
விருத்தாசலம் அடுத்த உளுந்துார்பேட்டை - பரிக்கல் ரயில் நிலையங்களுக்கு இடையே 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் உடல், கடந்த 22ம் தேதி பகல் 1:00 மணியளவில் கிடந்தது. தகவலறிந்த விருத்தாசலம் ரயில்வே போலீசார் விசாரித்தனர்.
அதில், அவர், ஜார்கண்ட் மாநிலம், கண்டி மாவட்டம், கர்ரா கிராமத்தைச் சேர்ந்த ஜகர்நாத் முண்டா மகன் டஹரு முண்டா, 37; என்பதும், கன்னியாகுமரி மாவட்டம், ராஜாவூரில் செங்கல் சூளையில் வேலை செய்து வரும் மனைவி ஜவனி முண்டா, 31; என்பவரை பார்க்க ரயிலில் சென்ற அவர், தவறி விழுந்து இறந்தார்.
தொடர்ந்து, விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்ததும், அவர்களின் வறுமை காரணமாக உறவினர்கள் ஒப்புதலுடன், உடல் அடக்கம் செய்யப்பட்டது.

