ADDED : ஏப் 24, 2024 12:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டு அருகே மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில், சித்தப்பாவை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.
நடுவீரப்பட்டு அடுத்த எஸ்.புதுக்குப்பத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன், 55; இவர், தனது அண்ணன் மகன் மோகன், 40; என்பவருடன், நேற்று முன்தினம் இரவு எஸ்.புதுக்குப்பம் பள்ளி அருகில் மது அருந்தினர். அப்போது, போதையில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த மோகன், ராதாகிருஷ்ணனை தடியால் தாக்கினார்.
பலத்த காயமடைந்த ராதாகிருஷ்ணனை, கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி பிம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்த புகாரில், நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிந்து மோகனை கைது செய்தனர்.

