sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 15, 2025 ,கார்த்திகை 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பெ.பொன்னேரி பஸ் நிறுத்தத்தில் வேகத்தடை அமைக்க கோரிக்கை

/

பெ.பொன்னேரி பஸ் நிறுத்தத்தில் வேகத்தடை அமைக்க கோரிக்கை

பெ.பொன்னேரி பஸ் நிறுத்தத்தில் வேகத்தடை அமைக்க கோரிக்கை

பெ.பொன்னேரி பஸ் நிறுத்தத்தில் வேகத்தடை அமைக்க கோரிக்கை


ADDED : மே 21, 2024 05:19 AM

Google News

ADDED : மே 21, 2024 05:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெண்ணாடம்: பெ.பொன்னேரி பஸ் நிறுத்தத்தில் வேகத்தடை அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விருத்தாசலம் - திட்டக்குடி சாலை மார்க்கத்தில் பெண்ணாடம் அடுத்த பெ.பொன்னேரி ரயில்வே மேம்பாலம் வழியாக பஸ், லாரி, வேன், பள்ளி, கல்லுாரி வாகனங்கள் மற்றும் சிமென்ட் ஆலைகளுக்கு செல்லும் கனரக வாகனங்கள் உட்பட ஆயிரக்கணக்கான வாகனங்கள் தினசரி செல்கின்றன.

அதில், பெ.பொன்னேரி பஸ் நிறுத்தம் பகுதியில் வாகனங்கள் மெதுவாகச் செல்ல நெடுஞ்சாலைத்துறை சார்பில் வேகத்தடை அமைக்கப்பட்டது. இதனால் வாகன விபத்துகள், உயிரிழப்பு ஓரளவுக்கு குறைந்தது.

கடந்தாண்டு மேம்பாலம் முகப்பில் ரவுண்டானா அமைக்கும்போது, வேகத்தடை அகற்றப்பட்டன. ஆனால் ரவுண்டானாவில் ைஹமாஸ் விளக்கும் அமைக்கவில்லை. வேகத்தடையும் இல்லை. இதனால் கனரக வாகனங்கள் உட்பட இவ்வழியே செல்லும் வாகனங்கள் தாறுமாறாக செல்வதால் அடிக்கடி வாகன விபத்துகள் ஏற்படுவதுடன் உயிரிழப்பும் தொடர்கின்றன.

எனவே, வாகன ஓட்டிகள், பொதுமக்கள் நலன்கருதி, பெ.பொன்னேரி பஸ் நிறுத்தத்தில வேகத்தடை அமைக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us