/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விஜயமாநகரம் கோவில்கள் பராமரிப்பு இந்து சமய அறநிலையத்துறைக்கு பரிந்துரை
/
விஜயமாநகரம் கோவில்கள் பராமரிப்பு இந்து சமய அறநிலையத்துறைக்கு பரிந்துரை
விஜயமாநகரம் கோவில்கள் பராமரிப்பு இந்து சமய அறநிலையத்துறைக்கு பரிந்துரை
விஜயமாநகரம் கோவில்கள் பராமரிப்பு இந்து சமய அறநிலையத்துறைக்கு பரிந்துரை
ADDED : மே 25, 2024 01:26 AM
விருத்தாசலம்: விஜயமாநகரம் கோவில்கள் தொடர்பான சமாதான கூட்டத்தில் தீர்வு ஏற்படாததால், கோவில்களை பராமரிப்பது குறித்து இந்து சமய அறநிலையத்துறைக்கு தாசில்தார் உதயகுமார் பரிந்துரை செய்தார்.
விருத்தாசலம் அடுத்த விஜயமாநகரம் கிராமத்தில் பாசி அம்மன் கோவில், பச்சைவாழி அம்மன், முருகன் கோவில், காசி விஸ்வநாதர் கோவில்கள் உள்ளன.
கோவில்களை நிர்வகிப்பது, திருவிழா நடத்துவது தொடர்பாக, பாலன் தெரு பாலகிருஷ்ணன், கருப்பன் தெரு கலியபெருமாள், மொட்டையன் தெரு குழந்தைவேல் ஆகியோரது தலைமையிலான மூன்று குழுவினருக்குள் போட்டி ஏற்பட்டது.
இது தொடர்பாக, விருத்தாசலம் நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த 2020, 21ம் ஆண்டுகளில் தாசில்தார் தலைமையில் நடந்த பேச்சு வார்த்தை கூட்டங்களில் உடன்பாடு ஏற்படவில்லை. கடந்த பிப்., 14ம் தேதி நடந்த சமாதான கூட்டத்திலும் தீர்வு ஏற்படாத நிலையில் பாசி அம்மன், பச்சைவாழி அம்மன், முருகன் கோவில்கள் பூட்டி வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், கோவில்களை திறந்து திருவிழா நடத்துவது தொடர்பாக விருத்தாசலம் தாலுகா அலுவலகத்தில் நேற்று முன்தினம் சமாதான கூட்டம் நடந்தது. தாசில்தார் உதயகுமார் தலைமை தாங்கினார். தலைமையிடத்து துணை தாசில்தார் கோவிந்தன், சப் இன்ஸ்பெக்டர் கணபதி மற்றும் பாலகிருஷ்ணன், கலிபெருமாள், குழந்தைவேல் ஆகிய மூன்று தரப்பை சேர்ந்த முக்கியஸ்தர்கள் பங்கேற்றனர்.
மாலை 3:30 முதல், இரவு 7:30 மணி வரை நடந்த கூட்டத்தில் தீர்வு ஏற்படவில்லை. இதனால், விஜயமாநகரம் கோவில்களை பராமரிப்பது குறித்து இந்து சமய அறநிலையத்துறையினருக்கு பரிந்துரை செய்து, தாசில்தார் உதயகுமார் பரிந்துரை செய்தார்.

