ADDED : ஏப் 22, 2024 06:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அருகே மின்சாரம் தாக்கியதில் ஒருவர் இறந்தார்.
நடுவீரப்பட்டு அடுத்த சூரியன்பேட்டையை சேர்ந்தவர் சிவா,40;இவர் நேற்று காலை தமது வீட்டின் குடிநீர் மோட்டார் சுவிட்ச் போடும் போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியது.
இதில் பாதிக்கப்பட்ட சிவாவை உறவினர்கள் கடலுார் அரசு மருத்துவமனைக்கு கூட்டி சென்றனர்.
அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே சிவா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து புகாரின் பேரில் நடுவீரப்பட்டு ்போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

