/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுாரில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
/
கடலுாரில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
ADDED : மே 25, 2024 01:18 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் துறைமுகத்தில் ௧ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது.
இது இன்று காலை மேலும் வலுப்பெற்று புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதன் காரணமாக கடலுார் துறைமுகத்தில் நேற்று முன்தினம் ௧ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்பட்டுள்ளது.
மேலும், கடல் சீற்றத்தின் காரணமாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் தங்கள் படகுகளைபா துகாப்பான இடங்களில் நிறுத்தி வைத்துள்ளனர்.

