/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பொறியியல் கல்லுாரியில் முதலாண்டு வகுப்பு துவக்கம்
/
பொறியியல் கல்லுாரியில் முதலாண்டு வகுப்பு துவக்கம்
ADDED : செப் 10, 2024 12:39 AM

சிதம்பரம் : சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் கல்லுாரியில், முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா நடந்தது.
பொறியியல் துறை புல முதல்வர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரிபிரகாஷ், இயந்திர பொறியியல் துறைத் தலைவர் வைத்தியநாதன் வரவேற்றார். துணைவேந்தர்கதிரேசன் மாணவர்களுக்கு அறிவுரைகள் வழங்கி பேசினார். முன்னாள் மாணவர்,சிங்கப்பூர், ஆக்சி ஹோல்டிங்ஸ் நிறுவன திட்ட லேமாளர் பெருமாள்மூர்த்தி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
பல்கலை., வேலைவாய்ப்பு மற்றும் தொழில்முனைவு சார்பில் கிருஷ்ணசாமி,சம வாய்ப்பு பிரிவு இயக்குனர் தெய்வசிகாமணி,புல முதல்வர்கள் விஜயராணி, ஸ்ரீராம்,குலசேகரபெருமாள்,அருட்செல்வி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
மருந்தியல் துறைத்தலைவர் ஜானகிராமன் நன்றி கூறினார்.

