/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விபத்து இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி
/
விபத்து இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி
ADDED : ஏப் 04, 2024 12:47 AM

கடலுார்: கடலுாரில், விபத்து இழப்பீடு தொகை வழங்காததால், விழுப்புரம் கோட்ட அரசு போக்குவரத்துக்கழக பஸ் ஜப்தி செய்யப்பட்டது.
பண்ருட்டி அடுத்த மேல்பட்டாம்பாக்கத்தை சேர்ந்தவர் சுல்தான், 55; இவரது மனைவி அபிதா, 50; இருவரும் கடந்த 22.4.2017 அன்று, பைக்கில் பண்ருட்டி நோக்கி சென்றனர். திருவதிகை அருகே சென்றபோது விழுப்புரம் கோட்ட அரசு போக்குவரத்துக்கழக பஸ் மோதியது. இந்த விபத்தில், அபிதா உயிரிழந்தார்.
இதுகுறித்து பண்ருட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். மேலும், அபிதா உயிரிழப்புக்கு இழப்பீடு கேட்டு, கடலுார் சிறப்பு சார்பு நீதிமன்றத்தில் சுல்தான் குடும்பத்தினர் வழக்கு தொடர்ந்தனர். விசாரணை நடத்திய நீதிபதி, ரூ.20.21 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டார்.
ஆனால், இழப்பீடு தொகை வழங்காமல் போக்குவரக்கழகம் காலதாமதம் செய்தது. அதையடுத்து, சுல்தான் தரப்பில் வக்கீல்கள் ராதாகிருஷ்ணன், சந்திரசேகரன், நிறைவேற்று மனு தாக்கல் செய்தனர்.
விசாரணை செய்த சிறப்பு சார்பு நீதிமன்ற நீதிபதி சுதா, விழுப்புரம் கோட்ட அரசு போக்குவரத்து கழக பஸ்சை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். அதன்பேரில் கோர்ட் ஊழியர்கள் கடலுார் பஸ் நிலையத்தில் நின்ற கடலுார்-புதுச்சேரி செல்லும் அரசு பஸ்சை ஜப்தி செய்து கோர்ட்டில் ஒப்படைத்தனர்.

