/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியல் வழங்கல்
/
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியல் வழங்கல்
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியல் வழங்கல்
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியல் வழங்கல்
ADDED : மே 15, 2024 01:03 AM

கடலுார் : கடலுார் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, தற்காலிக மதிப்பெண் பட்டியல் மற்றும் அசல் மாற்றுச்சான்றிதழ் வழங்கும் பணி துவங்கியது.
கடலுார் மாவட்டத்தில், நடந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், 16 ஆயிரத்து 908 மாணவர்கள், 15 ஆயிரத்து 661 மாணவிகள் என மொத்தம் 32 ஆயிரத்து 569 பேர் தேர்வு எழுதினர். அதில்,15 ஆயிரத்து 230 மாணவர்கள், 14 ஆயிரத்து 939 மாணவிகள் என, மொத்தம் 30 ஆயிரத்து 169 தேர்ச்சி பெற்றனர். இம்மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் பட்டியல் வழங்க பள்ளிக் கல்வித்துறை ஏற்பாடு செய்தது.
அதன்படி, மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில், நேற்று முதல் தற்காலிக மதிப்பெண் பட்டியல் மற்றும் அசல் மாற்றுச்சான்றிதழ் வழங்கும் பணி துவங்கியது.
மதிப்பெண் பட்டியல் மற்றும் மாற்றுச்சான்றிதழ் பெற பள்ளிகளில், மாணவர்கள் தங்களின் பெற்றோர்களுடன் ஆர்வமாக குவிந்தனர்.

