sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

முன்விரோத தகராறில் 3 பேரை வெட்டிய வழக்கில் 3 பேர் கைது

/

முன்விரோத தகராறில் 3 பேரை வெட்டிய வழக்கில் 3 பேர் கைது

முன்விரோத தகராறில் 3 பேரை வெட்டிய வழக்கில் 3 பேர் கைது

முன்விரோத தகராறில் 3 பேரை வெட்டிய வழக்கில் 3 பேர் கைது


ADDED : மே 19, 2024 05:20 AM

Google News

ADDED : மே 19, 2024 05:20 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புவனகிரி : புவனகிரி அருகே முன் விரோத தகராறில் 3 பேரை கத்தியால் வெட்டிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

புவனகிரி அடுத்த பெருமாத்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் திருமலைராஜன், 44; அதே பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமார். இருவருக்குமிடையே முன்விரோதம் இருந்து வந்தது.

கடந்த 13ம் தேதி இரவு திருமலைராஜன் தனது நண்பர்களான அதேப்பகுதியைச் சேர்ந்த சுந்தரபாண்டியன், 45; பூதவராயன்பேட்டை விஜயகுமார் ஆகியோருடன் அப்பகுதியில் உள்ள குளக்கரையில் மது அருந்தினார்.

அப்போது அங்கு வந்த அருண்குமார், தனது நண்பர்களுடன் சேர்ந்து திருமலைராஜன் மீது பெட்ரோல் குண்டு வீசி கொலை செய்ய முயன்றார். தப்பியோடிய மூவரையும் கத்தியால் வெட்டி, உருட்டுக்கட்டையால் தாக்கினர்.

இதில் படுகாயம் அடைந்த 3 பேரும், சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இது குறித்த புகாரின் பேரில் புவனகிரி போலீசார் வழக்குப் பதிந்து பெருமாத்துார் புகழேந்தி, 25; ஆதிவராகநத்தம் தியாகராஜன், 45; ரஞ்சித்குமார், 23; ஆகிய 3 பேரையும் நேற்று கைது செய்தனர். இச்சம்பவத்தில் தொடர்புடைய அருண்குமார் உட்பட மேலும் சிலரைத் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us