/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ரூ.1.20 கோடியில் கட்டப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பது எப்போது
/
ரூ.1.20 கோடியில் கட்டப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பது எப்போது
ரூ.1.20 கோடியில் கட்டப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பது எப்போது
ரூ.1.20 கோடியில் கட்டப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பது எப்போது
ADDED : ஆக 12, 2024 05:24 AM

புவனகிரி: புவனகிரி ஒன்றியம், மஞ்சக்கொல்லையில் ரூ.1.20 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்ட அரசு ஆரம்பசுகாதார நிலையம், சுகாதாரத்துறையினர் அலட்சியத்தால் திறப்பு விழா காணாமல் கிடப்பில் போட்டுள்ளனர்.
புவனகிரி தாலுகாவாக தரம் உயர்த்தப்பட்டப் பின்,இங்கு இயங்கி வந்த ஆரம்ப சுகாதார நிலையம், கிருஷ்ணாபுரத்தில் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு இடம் மாற்றப்பட்டது. . இதனால் புவனகிரி சுற்றுபகுதியில் 36 கிராமங்களை சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட பலர் கிருஷ்ணாபுரத்திற்கு சென்று வரமுடியாமல் பாதிக்கப்பட்டனர். இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. அதன் எதிரொலியால் மஞ்சக்கொல்லை ஊராட்சித் தலைவர் ராதாகிருஷ்ணன் தீர்மானம் நிறைவேற்றி ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுவதற்கு இடம் ஒதுக்கி ஒப்புதல் அளித்தார்.
இந்நிலையில் தமிழகத்தில் புதிதாக 26 இடங்களில் ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுவதற்கு தமிழ்நாடு அரசு, அரசாணை வெளியிட்டது. இதில் மேல்புவனகிரி மஞ்சக்கொல்லையில் அனைத்து வசதிகளுடன் ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுவதற்கு ரூ. 1.20 கோடி நிதி ஒதுக்கினர். சென்னையில் நடந்த அரசு விழாவில் முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்.
அதன் பின் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகர் வருவாய்த்துறை அதிகாரிகளுடன் ஆலோசித்து நிலமாற்றம் செய்தார். கலெக்டர் உத்தரவிற்குப் பின் கட்டுமானப்பணிகள் துவங்கியது. அனைத்துப்பணிகளும் முடிந்த நிலையில் கிருஷ்ணாபுரம் ஆரம்ப சுகாதாரத்துறையினர் அலட்சியத்தால், திறப்பு விழா காணாமல் கிடப்பில் போட்டனர். இதனால் தற்போது குடிமகன்களின் புகளிடமாக உள்ளது. மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து ஆரம்ப சுகாதார நிலையத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்.

