sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 17, 2025 ,புரட்டாசி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கேரளாவில் ரூ.3.24 கோடி கொள்ளை: திருவாரூர் பா.ஜ., பிரமுகருக்கு 'காப்பு'

/

கேரளாவில் ரூ.3.24 கோடி கொள்ளை: திருவாரூர் பா.ஜ., பிரமுகருக்கு 'காப்பு'

கேரளாவில் ரூ.3.24 கோடி கொள்ளை: திருவாரூர் பா.ஜ., பிரமுகருக்கு 'காப்பு'

கேரளாவில் ரூ.3.24 கோடி கொள்ளை: திருவாரூர் பா.ஜ., பிரமுகருக்கு 'காப்பு'


ADDED : ஜூலை 24, 2025 01:27 PM

Google News

ADDED : ஜூலை 24, 2025 01:27 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாரூர்: கேரளா மாநிலத்தில், கடந்த மாதம், 3.24 கோடி ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்ட வழக்கில், திருவாரூர் பா.ஜ., பிரமுகர் கைது செய்யப்பட்டார்.

கேரளா மாநிலம், ஆலப்புழா மாவட்டத்தில், கும்பல் ஒன்றால் கடந்த மாதம், கன்டெய்னர் லாரியில் இருந்து, 3.24 கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது. இது தொடர்பாக விசாரித்த கேரள போலீசார், திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த இருவரை கைது செய்து, திருவாரூர் பகுதியை சேர்ந்தவர்களை தேடி வந்தனர்.

அந்நிலையில், திருவாரூரைச் சேர்ந்த, துரைஅரசன் என்பவர், கேரள மாநிலம், கரியகுளக்கரை போலீஸ் ஸ்டேஷனில் ஆஜர் ஆகிவிட்டதாக கூறப்படுகிறது. இவர், பா.ஜ., கட்சியில், ஓ.பி.சி., அணி மாநில செயற்குழு உறுப்பினர்.

மேலும், திருவாரூர் வந்த கேரள போலீசார், இக்கொள்ளையில் தொடர்பு இருப்பதாக, திருவாரூர் அருகில், சேந்தமங்கலத்தைச் சேர்ந்த ஸ்ரீராம், 29, என்பவரை நேற்று கைது செய்தனர். அவரது காரையும் பறிமுதல் செய்தனர். இவர், பா.ஜ., இளைஞர் அணி, திருவாரூர் நகர முன்னாள் பொதுச்செயலர் ஆவார்.






      Dinamalar
      Follow us