sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மொபைல் பறித்து விட்டு தப்பிய திருடன் கால் முறிவு

/

மொபைல் பறித்து விட்டு தப்பிய திருடன் கால் முறிவு

மொபைல் பறித்து விட்டு தப்பிய திருடன் கால் முறிவு

மொபைல் பறித்து விட்டு தப்பிய திருடன் கால் முறிவு


ADDED : செப் 26, 2024 11:43 PM

Google News

ADDED : செப் 26, 2024 11:43 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்னுார், : ஆட்டோ டிரைவரிடம் மொபைலை பறித்துக் கொண்டு தப்பி ஓடிய திருடன் கீழே விழுந்ததில் கால் முறிந்தது.

கோவில்பாளையம் அருகே கொண்டையம்பாளையத்தைச் சேர்ந்தவர் ஜெர்மன் ராகேஷ், 24. இவர் மீது கற்பழிப்பு, அடிதடி, உள்ளிட்ட எட்டு வழக்குகள் உள்ளன. நேற்று காலை ராகேஷ், தனது நண்பர்கள் நந்தகுமார், 21, சந்தோஷ், 25, ராகுல், 19 ஆகியோருடன் அன்னுாரில் பூபதி என்பவரின் ஆட்டோவில் கோவில்பாளையம் சென்றனர்.

அப்போது நான்கு பேரும் சேர்ந்து பூபதியின் மொபைல் மற்றும் 2,000 ரூபாயை பறித்துக் கொண்டு தப்ப முயன்றனர். உடனே பூபதி சத்தம் போட்டார். சத்தத்தை கேட்டு அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் திரண்டனர். நான்கு பேரும் தப்பி ஓடினர். இதில் ராகேஷ் கீழே விழுந்ததில் அவருடைய வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

ஊர் பொதுமக்கள் ராகேசை அன்னுார் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். போலீசார் ராகேஷ் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். சந்தோஷ் என்பவரும் நேற்று இரவு பிடிபட்டார். மேலும் இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us