/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போன் பேசிய மாணவர் தவறி விழுந்து பலி
/
போன் பேசிய மாணவர் தவறி விழுந்து பலி
ADDED : மார் 16, 2024 12:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை:கோவை, நஞ்சுண்டாபுரம் செபாஸ்டின், 49. இவரது மகன் டேவிட் பிரிட்ஜ், 24, தனியார் கல்லுாரியில் இன்ஜினியரிங் இறுதி ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம்,மொட்டை மாடியில் மொபைல் போனில் பேசிக்கொண்டு இருந்தார்.
கால் தடுமாறி மாடியில் இருந்து கீழே விழுந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.

