sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 15, 2025 ,ஆவணி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

'வெல்லும் போது தட்டுகிற கைகளை விட தாங்குகின்ற கைகள் புனிதமானவை'

/

'வெல்லும் போது தட்டுகிற கைகளை விட தாங்குகின்ற கைகள் புனிதமானவை'

'வெல்லும் போது தட்டுகிற கைகளை விட தாங்குகின்ற கைகள் புனிதமானவை'

'வெல்லும் போது தட்டுகிற கைகளை விட தாங்குகின்ற கைகள் புனிதமானவை'


ADDED : செப் 10, 2025 10:10 PM

Google News

ADDED : செப் 10, 2025 10:10 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம்; வெல்லுகின்ற போது தட்டுகின்ற கைகளை விட, வீழுகின்ற போது தாங்குகின்ற கைகள் புனிதமானவை, என, கவிஞர் கவிதாசன் மேட்டுப்பாளையத்தில் பேசினார்.

மேட்டுப்பாளையம் அடுத்த கல்லாறு சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டு பள்ளியில், கோவை சகோதயா கூட்டமைப்பு பள்ளிகள் சார்பில், சிறந்த ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா நடந்தது.

விழாவுக்கு கோவை சகோதயா கூட்டமைப்பு பள்ளிகள் அமைப்பின் தலைவர் பி.எஸ்.ஜி., பப்ளிக் பள்ளியின் முதல்வர் கிரீஸ் ஈஸ்வரன் தலைமை வகித்தார். சச்சிதானந்த பள்ளி செயலர் கவிஞர் கவிதாசன், ஆசிரியர்களுக்கு விருது மற்றும் கேடயம் வழங்கி பேசியதாவது:

கல்வியின் நோக்கம் மாறிக்கொண்டே இருக்கிறது. செயற்கை நுண்ணறிவு கல்வி முறையை மாற்றலாம். ஆனால் ஒழுக்கமும், பழக்கமும் மாறாதது. எப்படிப்பட்டவர்களையும் ஆசிரியர்களால் மட்டுமே மாற்றிவிட முடியும்.

வெல்லுகின்ற போது தட்டுகின்ற கைகளை விட, வீழுகின்ற போது தாங்குகின்ற கைகள் புனிதமானவை. அப்படிப்பட்ட புனிதமான கைகளை கொண்டவர்களாக, ஆசிரியர்கள் இருக்க வேண்டும். பெற்றோர்களே கைவிட்டாலும் ஆசிரியர்களாகிய நீங்கள், அவர்களை கைவிடக்கூடாது. ஆசிரியர்கள் தொடர்ந்து படித்துக் கொண்டே இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் பள்ளியின் முதல்வர் உமா மகேஸ்வரி வரவேற்றார். கோவை சகோதயா கூட்டமைப்பு பள்ளிகள் அமைப்பின் செயலர் விவேகானந்தா அகாடமி பள்ளி முதல்வரான பத்மநாபன் நன்றி கூறினார்.

விழாவில் பள்ளியின் துணை முதல்வர் சக்திவேல், கல்விப்புல முதன்மையர் ஷீலா கிரேஸ் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us