sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பேரூராட்சி நிர்வாகத்தை அறிந்து கொள்ள மாணவர்கள் ஆர்வம்

/

பேரூராட்சி நிர்வாகத்தை அறிந்து கொள்ள மாணவர்கள் ஆர்வம்

பேரூராட்சி நிர்வாகத்தை அறிந்து கொள்ள மாணவர்கள் ஆர்வம்

பேரூராட்சி நிர்வாகத்தை அறிந்து கொள்ள மாணவர்கள் ஆர்வம்


ADDED : செப் 26, 2024 11:40 PM

Google News

ADDED : செப் 26, 2024 11:40 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்னுார் : அன்னுார் பேரூராட்சியில், கல்லூரி மாணவ, மாணவியர் நிர்வாகம் மற்றும் களப்பணிகளை பார்வையிட்டனர்.

அன்னுார் பேரூராட்சியில், 15 வார்டுகளில், 28 ஆயிரம் பேர் வசிக்கின்றனர்.

சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி, லைசன்ஸ் கட்டணம் என ஆண்டுக்கு 5 கோடி ரூபாய்க்கு மேல் வரி வருவாய் உள்ளது. ஆண்டுக்கு 10 கோடி ரூபாய்க்கு பணிகள் நடைபெறுகின்றன.

பேரூராட்சியின் நிர்வாக நடைமுறை மற்றும் களப்பணிகள் குறித்து தெரிந்து கொள்ள சரவணம்பட்டி, குமரகுரு கலை அறிவியல் கல்லூரி மாணவ, மாணவியர் 50 பேர் ஒரு நாள் பயணமாக நேற்று வந்தனர்.

அவர்களிடம் பேரூராட்சி செயல் அலுவலர் கார்த்திகேயன் பேரூராட்சி செயல்பாடுகள் குறித்து விளக்கினார்.

பேரூராட்சி தலைவர் பரமேஸ்வரன், பேரூராட்சியில், தினமும் 10 டன் குப்பை சேகரிக்கப்படுவது, அவற்றை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரிப்பது குறித்து விவரித்தார்.

துணைத் தலைவர் விஜயகுமார், கவுன்சிலர்கள் கார்த்திகேயன், புவனேஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாணவ, மாணவியர், குளக்கரையில் அமைக்கப்பட்டு வரும் பூங்கா, நடைபாதை, அல்லிகுளம் குளத்தில் தூர்வாரும் பணி, வார சந்தையில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது ஆகியவற்றையும் பார்வையிட்டனர்.






      Dinamalar
      Follow us