sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மொபைல் கோபுரம் அமைக்க சிங்கை எம்.எல்.ஏ., எதிர்ப்பு

/

மொபைல் கோபுரம் அமைக்க சிங்கை எம்.எல்.ஏ., எதிர்ப்பு

மொபைல் கோபுரம் அமைக்க சிங்கை எம்.எல்.ஏ., எதிர்ப்பு

மொபைல் கோபுரம் அமைக்க சிங்கை எம்.எல்.ஏ., எதிர்ப்பு


ADDED : டிச 24, 2024 07:14 AM

Google News

ADDED : டிச 24, 2024 07:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; சிங்காநல்லுார் ஸ்ரீபதி நகரில் மொபைல் கோபுரம் அமைப்பதை, உடனடியாக கைவிட வேண்டும் என்று, சிங்கை தொகுதி எம்.எல்.ஏ.,ஜெயராமன் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தார்.

மனுவில் அவர் கூறியுள்ளதாவது:

சிங்காநல்லுார் ஸ்ரீபதி நகர் மூன்றாவது வீதியில் வசிக்கும் ஒருவர், தனது வீட்டின் மேல் தளத்தில், 65 அடி உயரத்துக்கு இரும்பால் ஆன, மொபைல் கோபுரம் அமைக்கும் பணிகளை மேற்கொண்டார்.

மொபைல் கோபுரம் அமைக்கும் வீடு, மாநகராட்சியின் கட்டட அமைப்பு விதிகளுக்கு புறம்பானது. மொபைல் கோபுரம் அமைக்கும் போது, எதிர்பாராமல் விபத்து ஏற்படும் பட்சத்தில் அங்கு வசிப்போருக்கு பாதிப்பு ஏற்படும். இது குறித்து கிராம நிர்வாக அலுவலர், களஆய்வு மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.

ஸ்ரீபதி நகரில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பை கவனத்தில் கொண்டு, மொபைல் கோபுரம் அப்பகுதியில் அமைக்க வேண்டாம். அதற்கு கலெக்டர் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

இவ்வாறு, அவர் வலியுறுத்தியுள்ளார்.






      Dinamalar
      Follow us