/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குப்பை தரம் பிரித்து வழங்க வேண்டுகோள்
/
குப்பை தரம் பிரித்து வழங்க வேண்டுகோள்
ADDED : செப் 19, 2025 09:24 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; மாநகராட்சி தெற்கு மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நடந்து வரும் துாய்மை பணிகளை மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், நேற்று ஆய்வு செய்தார்.
96வது வார்டு முதலியார் வீதி, பிரதான சாலை பகுதியில் குப்பை தரம் பிரிப்பு பணியை ஆய்வு செய்த அவர், குறிச்சி குளக்கரையில் நடைபயிற்சி சென்றவர்களிடம், குப்பை தரம் பிரித்து தருவது குறித்த விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கினார்.
உதவி கமிஷனர் துரைமுருகன், நகரமைப்பு அலுவலர் ராஜசேகர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.