sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 06, 2026 ,மார்கழி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 பஸ் ஸ்டாண்ட் அமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

/

 பஸ் ஸ்டாண்ட் அமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

 பஸ் ஸ்டாண்ட் அமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

 பஸ் ஸ்டாண்ட் அமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்


ADDED : டிச 16, 2025 07:35 AM

Google News

ADDED : டிச 16, 2025 07:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை: உடுமலை அருகே தேவனுார்புதுாரில் பஸ் ஸ்டாண்ட் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

உடுமலை, பொள்ளாச்சி தாலுகா எல்லையில் தேவனுார்புதுார் ஊராட்சி உள்ளது.

இந்த இரண்டு தாலுகாவிலிருந்தும் டவுன் பஸ்கள் இந்த ஊருக்கு செல்கின்றன.

ஆனால், அங்கு பஸ்கள் நிறுத்த பஸ் ஸ்டாப் மட்டுமே உள்ளது. பல்வேறு கிராமங்களுக்கு செல்லும் டவுன் பஸ்கள் இங்கு வருகின்றன. அவை நிறுத்த இடமில்லாமல், ரோட்டிலேயே நிறுத்த வேண்டிய சூழல் ஏற்படுகிறது.

இதனால், அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. விபத்துகளும் ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே, அங்கு பஸ் ஸ்டாண்ட் உடனடியாக அமைக்க ஊராட்சி நிர்வாகமும், உடுமலை ஒன்றிய நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதன் வாயிலாக, இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஏற்படும்.






      Dinamalar
      Follow us