/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
100 நாள் திட்ட பணித்தள பொறுப்பாளருக்கு சிக்கல்?
/
100 நாள் திட்ட பணித்தள பொறுப்பாளருக்கு சிக்கல்?
ADDED : பிப் 19, 2025 09:29 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
- நமது நிருபர் -
கிராம ஊராட்சிகளில், நுாறு நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் தினசரி 150 பேரையாவது பணிக்கு அழைத்து வர வேண்டும் என, பணித்தள பொறுப்பாளர்களுக்கு அதிகாரிகள் உத்தரவிடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பணித்தள பொறுப்பாளர்கள் சிலர் கூறுகையில், '100 நாட்கள் பணிகள் நிறைவடைந்த ஒரு கிராமத்தில், மீண்டும், தினசரி, 150 பேரையாவது வேலைக்கு அழைத்து வர வேண்டும் என்கின்றனர். இதற்காக, வீடு வீடாக சென்று ஆட்களைத் தேடிப் பிடிக்க வேண்டிய சூழல் உள்ளது. 150 பேரை கட்டாயம் கணக்கில் கொண்டுவர வேண்டும் என, அதிகாரிகள் அழுத்தம் தருகின்றனர்' என்றனர்.

