sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பிரதமர் மோடி பிறந்த நாள்; விநாயகர் கோவிலில் அர்ச்சனை

/

பிரதமர் மோடி பிறந்த நாள்; விநாயகர் கோவிலில் அர்ச்சனை

பிரதமர் மோடி பிறந்த நாள்; விநாயகர் கோவிலில் அர்ச்சனை

பிரதமர் மோடி பிறந்த நாள்; விநாயகர் கோவிலில் அர்ச்சனை


ADDED : செப் 19, 2024 06:38 AM

Google News

ADDED : செப் 19, 2024 06:38 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் - காரமடை சாலையில், வி.ஐ.பி., நகரில், மத்திய இணை அமைச்சர் முருகனின் முகாம் அலுவலகம் உள்ளது.

இந்த குடியிருப்பு வளாகத்தில் ஐஸ்வர்ய கணபதி விநாயகர் கோவில் உள்ளது. பிரதமர் மோடியின், 74ம் பிறந்த நாளை முன்னிட்டு, விநாயகர் கோவிலில், பிரதமர் பெயரில் அர்ச்சனை செய்ய, கோவில் அர்ச்சகரிடம், மத்திய இணை அமைச்சர் முருகன் தெரிவித்தார்.

இதை அறிந்த வி.ஐ.பி., நகர் குடியிருப்போர் நல சங்கத்தின் சார்பில், விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அமைச்சர் முருகன் கோவிலுக்கு வந்த போதும், குடியிருப்போர் நல சங்கத்தின் சார்பில், வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து விநாயகர் கோவிலில், பிரதமர் மோடியின் பெயருக்கு அர்ச்சனை செய்யப்பட்டது. பின்பு கோவில் வளாகத்தில் மத்திய இணை அமைச்சர் முருகன் மகிழம் மர நாற்றை நட்டார். குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகளிடமும், மக்களிடமும் அமைச்சர் நலம் விசாரித்தார்.

இந்த சிறப்பு பூஜையில், கோவை வடக்கு மாவட்ட, பா.ஜ., தலைவர் சங்கீதா, மாவட்ட துணைத் தலைவர்கள் கலைவாணி, விக்னேஷ், குடியிருப்போர் நல சங்க நிர்வாகி ராஜேந்திரன் மற்றும் சக்திவேல் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us