sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

வாழ்வில் ஒளி ஏற்றும் திருநாளில் மத்தாப்பு போல மகிழ்ச்சி நிறையட்டும்! இல்லம் தோறும் தீபாவளி தித்திப்பு

/

வாழ்வில் ஒளி ஏற்றும் திருநாளில் மத்தாப்பு போல மகிழ்ச்சி நிறையட்டும்! இல்லம் தோறும் தீபாவளி தித்திப்பு

வாழ்வில் ஒளி ஏற்றும் திருநாளில் மத்தாப்பு போல மகிழ்ச்சி நிறையட்டும்! இல்லம் தோறும் தீபாவளி தித்திப்பு

வாழ்வில் ஒளி ஏற்றும் திருநாளில் மத்தாப்பு போல மகிழ்ச்சி நிறையட்டும்! இல்லம் தோறும் தீபாவளி தித்திப்பு


UPDATED : அக் 30, 2024 11:50 PM

ADDED : அக் 30, 2024 08:34 PM

Google News

UPDATED : அக் 30, 2024 11:50 PM ADDED : அக் 30, 2024 08:34 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி; புத்தாடை அணிந்து, பட்டாசு வெடித்து, இனிப்பை சுவைத்து பல்வேறு தரப்பினரும் தீபாவளி பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடுகின்றனர்.

ஆண்டுக்கு ஒரு முறை தீபாவளி பண்டிகைக்கான ஏற்பாடுகள், மாதக்கணக்கில் நடந்தாலும் அதன் நினைவுகள், அடுத்த ஆண்டு வரை நீடிப்பது வழக்கம். அவ்வகையில், இன்று, பொள்ளாச்சி நகர், சுற்றுப்பகுதி கிராமங்களில், அனைத்து தரப்பினரும் மகிழ்ச்சியை அள்ளித் தரும் தீபாவளியைக் கொண்டாடுகின்றனர்.

அதிகாலை எழுந்து, கங்கா ஸ்நானம் செய்து, புத்தாடை அணிந்து, பட்டாசு வெடித்து மகிழ்ச்சி பொங்க, அனைவரிடமும் வாழ்த்துகளையும் பகிர தயாராகி வருகின்றனர்.

அவ்வகையில், நேற்று இரவு முதலே கண்களைக் கவரும் வானவேடிக்கைகளும், காதை பிளக்கும் வெடிகளுடன் தீபாவளியை கொண்டாட துவங்கி விட்டனர்.

மாரியம்மன் கோவில், பெருமாள் கோவில் என, அனைத்து கோவில்களிலும், செல்வவளம் பெருகும் லட்சுமி குபேரர், சிறப்பு பூஜை இன்று நடக்கிறது.

இதுஒருபுறமிருக்க, தீபாவளி பண்டிகை மற்றும் வார இறுதி விடுமுறையையொட்டி, டாப்சிலிப், வால்பாறை மற்றும் பொள்ளாச்சியில், அரசு மற்றும் தனியார் விடுதிகளில் அறைகளுக்கான 'புக்கிங்' பெருமளவு நிறைவடைந்திருந்தது.

இதனால், ஆழியாறு, கவியருவி, வால்பாறை உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களுக்கு சுற்றுலா பயணியர் நேற்றே உற்சாகத்துடன் வந்தடைந்தனர்.

பொள்ளாச்சி அடுத்த டாப்சிலிப்பில், குளிரான சீதோஷ்ண நிலை, அடர் வனம், பறவைகளின் ரீங்காரம் என இயற்கை எழில் கொஞ்சும் அழகைக் காண பலரும் முனைப்பு காட்டுகின்றனர். அங்குள்ள தங்கும் விடுதிகளில், தீபாவளி விடுமுறையொட்டி, 95 சதவீதம் 'புக்கிங்' முடிந்துள்ளது.

இதனால், வனம் மற்றும் வனவிலங்குகள் பாதுகாப்பு கருதி, விடுதிக்கு வரும் சுற்றுலாப் பயணியர், எக்காரணம் கொண்டும் பட்டாசு வெடிக்கக் கூடாது என, தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதேபோல, வால்பாறை மலைப்பாதையில், ஆர்வக் கோளாறு காரணமாக, வனத்தில் அத்துமீறி மது அருந்தவும், நுழையவும் வாய்ப்புள்ளதால், அதனைக் கண்டறிந்து தடுக்கும் வகையில், வனக்குழுவினர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

தீபாவளி ஞானத் திருநாளாகும்!

சுவாமி வேதாந்த ஆனந்தா, தத்துவ ஞான சபை மற்றும் அகில பாரதீய சந்நியாசிகள் சங்கம் ஒருங்கிணைப்பாளர்: பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் நம்முடைய சனாதன தர்மத்தின் ஆதிகுரு ஆவார். ஸ்ரீமத் பகவத் கீதையை அவர் அர்ஜுனனுக்கு கூறவில்லை, அர்ஜுனன் வாயிலாக நமக்கு போதித்தார்.மாய உலகம், தேய்கின்ற உடம்பு, அலைகின்ற மனம், இவற்றையும் கடந்து கடவுளை உணருகிற யுக்தியை, நம்முடைய சாஸ்திரங்கள் வழியாக போதிக்கப்படுகிறது.நிலையான மெய்ப்பொருளை உணர்வதே உண்மை திருவிழா ஆகும். அந்த வகையில் தீபாவளி ஞானத்திருவிழாவாகும். அசுர எண்ணங்களை, தெய்வ சிந்தனையால் அகற்றி, தூய எண்ணத்துடன், அறவழியில் வாழ்ந்து, கிருஷ்ணர் காட்டும் பாதையில் வாழ்வோம்.வீட்டில் தீபம் ஏற்றி, நம் அகத்திலும் ஞான தீபம் ஏற்றுவோம். இனிய சொற்களை இனிப்பு போல் பரிமாறுவோம். விருந்தோம்பி, புத்தாடை உடுத்தி, செல்வத்தை பகிர்ந்தளித்து வசந்த விழாவாக தீபாவளியை கொண்டாடுவோம். மத்தாப்பு ஜொலிப்பது போல், நம் தேசம் எங்கும் மகிழ்ச்சி நிறைந்து இருக்கட்டும்.



புண்ணியத்தை நல்கும் நாள்!

பூஜ்யஸ்ரீ ததேவாநந்த சுவாமிகள், ஆர்ஷவித்யா பீடம், ஆனைமலை: தீபாவளி அன்று மட்டுமே சூரிய உதயத்திற்கு முன்பாக எண்ணெய் தேய்த்து குளிப்பது சாஸ்திர அனுஷ்டானங்களில் ஒன்றாகும். மற்ற தினங்களில் அதிகாலையில் எண்ணெய் தேய்த்து குளிக்க கூடாது.நாம் நீராடுகிற நீரில், தீபாவளி அன்று கங்கையே வந்தடைவதாக கூறப்படுகிறது. அதனால் தான் தென்னாட்டில் இருக்கிற நாம் கூட வழக்கமாக கங்கா ஸ்நானம் ஆயிருச்சா என்று பேசுகிறோம்.தீபாவளி திருநாள், நமக்கு பாவத்தை போக்கி, புண்ணியத்தை நல்கக் கூடிய முக்கியமான திருநாளாகும். அறியாமை என்னும் அழுக்கை, சுய அறிவு என்னும் எண்ணெய் விட்டு, விசாரணை என்னும் அரப்பு தேய்த்து, நான் யார்? என்ற தன்னுணர்வு அடைய வேண்டும் என்பது பிறப்பின் நோக்கமாகும். மனிதப் பிறவி மேம்பட தீபாவளி திருநாள் கொண்டாடப்படுகிறது. தீபாவளி திருநாளில் நல்லெண்ணங்களை விதைத்து, மனமகிழ்ச்சியோடு, கொண்டாடுவோம்.








      Dinamalar
      Follow us