/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரேஸ்கோர்சில் போகலாம் 'வாக்'; வாங்கலாம் 'ஷாக்' திறந்து கிடக்கும் ஸ்விட்ச் பாக்சுக்கு மூடி போட ஆளில்லையா
/
ரேஸ்கோர்சில் போகலாம் 'வாக்'; வாங்கலாம் 'ஷாக்' திறந்து கிடக்கும் ஸ்விட்ச் பாக்சுக்கு மூடி போட ஆளில்லையா
ரேஸ்கோர்சில் போகலாம் 'வாக்'; வாங்கலாம் 'ஷாக்' திறந்து கிடக்கும் ஸ்விட்ச் பாக்சுக்கு மூடி போட ஆளில்லையா
ரேஸ்கோர்சில் போகலாம் 'வாக்'; வாங்கலாம் 'ஷாக்' திறந்து கிடக்கும் ஸ்விட்ச் பாக்சுக்கு மூடி போட ஆளில்லையா
ADDED : பிப் 26, 2024 12:25 AM

மின்விபத்து அபாயம்
ரேஸ்கோர்ஸ் நடைபாதையில், 'இ.பி.எல் - 37' என்ற எண் கொண்ட கம்பத்தில், ஸ்விட்ச் பாக்ஸ், நீண்ட நாட்களாக திறந்தநிலையில் உள்ளது. வெளியே நீட்டிக்கொண்டிருக்கும் ஒயர்களை குழந்தைகள் தொடுவதற்கு வாய்ப்புள்ளது. உடனடியாக மூட வேண்டும்.
- யுவராஜ், திருமகள் நகர்.
துரத்தும் நாய்கள்
இடையர்பாளையம், ராகவேந்திரா ரெசிடென்சி பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட நாய்கள் சுற்றுகின்றன. சாலையில் நடந்து செல்வோரை துரத்தி கடிக்கின்றன. குழந்தைகள், முதியவர்கள் சாலையில் நடந்து செல்ல அச்சப்படுகின்றனர்.
- ரஞ்சனி, இடையர்பாளையம்.
மோசமான சாலை
கு.வடமதுரை, குருடம்பாளையம், கதிர்நாயக்கன்பாளையம் பகுதியில் தார் சாலை வசதியில்லை. சாலை முழுவதும் வெறும் ஜல்லிக்கற்களாக இருக்கிறது. கற்களில் இடறி, வாகனஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். சரிவர குப்பை அகற்றாததால், தெருக்களில் ஆங்காங்கே குப்பை தேங்கியுள்ளது.
- விஜயா, கதிர்நாயக்கன்பாளையம்.
தெருநாய்களால் தொல்லை
வீரபாண்டி நான்கு, சாந்திமேடு, வள்ளலார் நகர் பகுதியில் சாலையில் பத்துக்கும் மேற்பட்ட தெருநாய்கள் சுற்றுகின்றன. நாய்கள் துரத்துவதால், வாகனஓட்டிகள் தடுமாறி கீழே விழுகின்றனர்.
- கார்த்திக், சாந்திமேடு.
போக்குவரத்திற்கு இடையூறு
டவுன்ஹால், தெலுங்கு பிராமணர் வீதி, கோபால் கற்பூர கம்பெனி அருகில், தனியார் டெலிபோன் நிறுவனம் சாலையோரம், இரும்பு கம்பி பதித்துள்ளது. இது, போக்குவரத்திற்கு மிகுந்த இடையூறாக உள்ளது. வாகனஓட்டிகள் விபத்தில் சிக்கவும் வாய்ப்புள்ளது.
- நாகராஜ், டவுன்ஹால்.
குண்டும், குழியுமான ரோடு
வெள்ளக்கிணறு, ஹட்கோ காலனி, பேஸ் - 2 முதல் என்.ஜி.ஓ., காலனி வரையுள்ள சாலை குண்டும், குழியுமாக உள்ளது. நடந்து செல்லவே சிரமமாக உள்ளது. வாகனங்களை இயக்குவது பெரும்பாடாக உள்ளது. தினமும் இச்சாலையில் விபத்து நடக்கிறது.
- ரங்கராஜன், வெள்ளக்கிணறு.
பத்தாத குடிநீர்
சேரன்நகர், எஸ்.பி.எம்., கிரீன் சிட்டியில், கடந்த நான்கு மாதங்களாக இரண்டு மணிநேரத்திற்கும் குறைவாகவே தண்ணீர் வருகிறது. பாதி தொட்டி கூட நிரம்புவதில்லை. போதிய தண்ணீரின்றி மக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.
- மதிவாணன், சேரன்நகர்.
குடிநீருக்காக காத்திருக்கிறோம்
சிங்காநல்லுார், ஐந்தாவது வார்டு, சத்தி ரோடு, எழில் நகர் குடியிருப்பிற்கு கடந்த 20 நாட்களுக்கு மேலாக குடிநீர் விநியோகம் செய்யவில்லை. போதிய தண்ணீரின்றி சொல்லமுடியாத இன்னலை பொதுமக்கள் சந்தித்துவருகின்றனர்.
- சிவக்குமார், சிங்காநல்லுார்.
வீணாகும் குடிநீர்
போத்தனுார், செட்டிபாளையம் ரோடு, முருகன் நகரில், மகா லட்சுமி பேக்கரி அருகில், குழாய் உடைந்து பெருமளவு தண்ணீர் சாலையில் ஓடுகிறது. விரிவாக்கம் செய்தாலும், ஆக்கிரமிப்புகளால் சாலை மிகவும் குறுகலாக இருக்கிறது.
- பத்ரி, போத்தனுார்.
மாட்டும் வாகனங்கள்
வரதராஜபுரம், சாய் மஹால் அருகில், சாக்கடை கால்வாய் அருகே சாலை மோசமாக சேதமடைந்துள்ளது. கால்வாய் சிலேப்புகளும் சிதிலமடைந்துள்ளன. கனரக வாகனங்கள் செல்லும் போது, சாலையில் மாட்டிக்கொள்கின்றன.
- நடராஜன், வரதராஜபுரம்.

