/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இளநீர் பண்ணை விலை மூன்று ரூபாய் உயர்வு
/
இளநீர் பண்ணை விலை மூன்று ரூபாய் உயர்வு
ADDED : மார் 11, 2024 01:51 AM
பொள்ளாச்சி;பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகா பகுதியில், இளநீர் பண்ணை விலை கடந்த வார விலையை விட, மூன்று ரூபாய் உயர்ந்துள்ளது.
ஆனைமலை இளநீர் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் கூறியதாவது:
இந்த வாரம், நல்ல தரமான குட்டை நெட்டை வீரிய ஒட்டு இளநீரின் விலை, கடந்த வார விலையை விட, மூன்று ரூபாய் உயர்த்தப்பட்டு, 31 ரூபாயாக நிர்ணயம் செய்யப்படுகிறது. ஒரு டன் இளநீரின் விலை, 11,500 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அனைத்து பகுதிகளிலும் கடுமையான வெயில் நிலவி வருகிறது. இளநீர் வரத்து மிகவும் குறைந்து தட்டுப்பாடு நிலவுகிறது.
வரக்கூடிய வாரங்களில் இளநீரின் விலை உயர்வு தொடர்ந்து நீடிக்கும். குறைந்த விலைக்கு கேட்டால் அறுவடையை சில நாட்கள் ஒத்தி வைக்கவும். எடைக்கு இளநீர் வெட்டும் விவசாயிகள் குறைந்தபட்சம், 37 நாட்கள் இடைவெளிக்கு பின் வெட்டவும். 30 நாட்களுக்கு முன்பே சில விவசாயிகள் எடைக்கு வெட்ட அனுமதிக்கின்றனர்.
அவர்கள் தோட்டத்தில் இளநீரின் எடை மிகவும் குறைவாக வருகிறது. வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கிறது. அதுவும் இந்த வெயில் காலத்தில் இளநீர் நன்கு ஊறுவதற்கு கூடுதல் நாட்களை எடுத்துக்கொள்கிறது; 37 நாட்கள் இடைவெளியில் வெட்டுவதால் நிச்சயமாக மகசூல் குறையாது. இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

