/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
யானை வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றணும்: விவசாயிகள் கோரிக்கை
/
யானை வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றணும்: விவசாயிகள் கோரிக்கை
யானை வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றணும்: விவசாயிகள் கோரிக்கை
யானை வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றணும்: விவசாயிகள் கோரிக்கை
UPDATED : டிச 18, 2025 09:36 AM
ADDED : டிச 18, 2025 05:17 AM

பெ.நா.பாளையம்: சின்னதடாகம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில், விவசாயிகள் மற்றும் வனத்துறையினர் பங்கேற்ற, கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.
இதில், விவசாயிகள் பேசியதாவது: வேட்டையன் யானையை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும். காட்டுப்பன்றிகளை சுட்டுக் கொல்ல, ஓரிரு வாரங்களில் வனத்துறையினர் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நிபுணர் குழு அல்லது வல்லுநர் சான்று அடிப்படையில், வனவிலங்குகளால் ஏற்படும் பயிர் சேதத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும். பிப்., மாதத்துக்குள் யானை வழித்தடங்கள் கண்டறியப்பட வேண்டும் என்கிற, உயர்நீதிமன்ற ஆணையில், புதிதாக யானை வழித்தடங்கள் உருவாக்க கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கிறோம். ஏற்கனவே உள்ள யானை வழித்தடங்களில் உள்ள, ஆக்கிரமிப்புகளை தயவு தாட்சண்யம் இன்றி அகற்ற வேண்டும். தொண்டாமுத்தூர் பகுதியில் அமைக்கப்படும் மின்வேலி போலவே, வனவிலங்கு பாதிப்பு உள்ள அனைத்து இடங்களிலும் அமைக்க வேண்டும். புதிய மின்வேலி சட்டத்தை, வனத்துறையினர் திரும்ப பெற வேண்டும்.இவ்வாறு, விவசாயிகள் பேசினர். இதற்கு பதில் அளித்து பேசிய உதவி வன பாதுகாவலர் விஜயகுமார், ''வேளாண் பயிர்களை அழிக்கும் காட்டுப் பன்றிகளை சுட்டுக் கொல்ல, நடவடிக்கை மேற்கொள்ளப்படும். விவசாயிகளின் அனைத்து நியாயமான கோரிக்கைகளும் உரிய அதிகாரிகளிடம் ஆலோசனை பெற்று, படிப்படியாக நிறைவேற்றப்படும்,'' என்றார்.
கூட்டத்தில், கோவை வனச்சரக அலுவலர் திருமுருகன், வனவர் மாரியப்பன், சாதி, மத, கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க மாநில அமைப்பாளர் பிரபு உள்ளிட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.

