sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பதப்படுத்திய உணவுப் பொருட்கள் ஏற்றுமதி: கருத்தரங்கில் வழிகாட்டல்

/

பதப்படுத்திய உணவுப் பொருட்கள் ஏற்றுமதி: கருத்தரங்கில் வழிகாட்டல்

பதப்படுத்திய உணவுப் பொருட்கள் ஏற்றுமதி: கருத்தரங்கில் வழிகாட்டல்

பதப்படுத்திய உணவுப் பொருட்கள் ஏற்றுமதி: கருத்தரங்கில் வழிகாட்டல்


ADDED : மார் 13, 2024 10:36 PM

Google News

ADDED : மார் 13, 2024 10:36 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி,- வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாடு குறித்து, தொழில்முனைவோருக்கு ஒரு நாள் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.

பொள்ளாச்சி அடுத்துள்ள, மணக்கடவு வாணவராயர் வேளாண் கல்வி நிறுவனம், தமிழ்நாடு உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகம் சார்பில் 'வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களின் ஏற்றுமதி மேம்பாடு' குறித்த பயிலரங்கம், தனியார் ஓட்டலில் நடந்தது.

வாணவராயர் வேளாண் கல்வி நிறுவன இயக்குனர் கெம்புசெட்டி, தலைமை வகித்தார். முன்னதாக, இணை பேராசிரியர் காளிதாஸ் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக, கோவை தேசிய வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி மாவட்ட வளர்ச்சி மேலாளர் திருமலாராவ் கலந்து கொண்டார்.

தொடர்ந்து, வேளாண் விளைபொருட்களின் ஏற்றுமதி முக்கியத்துவம், இறக்குமதியாளர் ஏற்றுமதியாளர் குறியீடு மற்றும் வெளிநாட்டு வர்த்தக இயக்குனரகத்தின் திட்டங்கள், வருங்கால திட்டங்கள் என, பல்வேறு தலைப்புகளின் கீழ் பேசினர்.

மேலும், காணொலி காட்சி வாயிலாக வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் பதிவு செய்யும் வழிமுறைகள் குறித்தும் விளக்கப்பட்டது.

கோவை வெளிநாட்டு வர்த்தக இயக்குனரக துணை மேலாளர் ஆனந்த்மோகன்மிஸ்ரா, வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் துணை மேலாளர் முத்தையா, உழவர் உற்பத்தியாளர் நிறுவன பிரதிநிதிகள், தொழில்முனைவோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். வாணவராயர் வேளாண் கல்வி நிறுவன ஒருங்கிணைப்பாளர் முருகானந்தம் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us