/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'தினமலர் பட்டம்' வினாடி-வினா போட்டி திறமையான மாணவர்கள் அடுத்த சுற்றுக்கு தகுதி
/
'தினமலர் பட்டம்' வினாடி-வினா போட்டி திறமையான மாணவர்கள் அடுத்த சுற்றுக்கு தகுதி
'தினமலர் பட்டம்' வினாடி-வினா போட்டி திறமையான மாணவர்கள் அடுத்த சுற்றுக்கு தகுதி
'தினமலர் பட்டம்' வினாடி-வினா போட்டி திறமையான மாணவர்கள் அடுத்த சுற்றுக்கு தகுதி
ADDED : டிச 14, 2025 07:59 AM

கோவை: 'தினமலர்' மாணவர் பதிப்பான 'பட்டம்' மற்றும் எஸ்.என்.எஸ்., கல்விக் குழுமம் இணைந்து நடத்தும், 'பதில் சொல் - பரிசை வெல்' வினாடி-வினா போட்டியில், பங்கேற்ற டாக்டர் பி.ஜி.வி., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கீர்த்திமான் அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிமாணவர்கள் அரையிறுதிக்கு தகுதி பெற்றனர்.
டாக்டர் பி.ஜி.வி.: சின்ன தடாகத்தில் உள்ள இப்பள்ளியில், நடந்த தகுதி சுற்றில் பங்கேற்ற 163 மாணவர்களில், 16 பேர் எட்டு அணிகளாக பிரிந்து, பள்ளி அளவிலான இறுதிசுற்றில் பங்கேற்றனர். இதில், 'டி' அணியின் அபினந்த் வினய், ஆகாஷ் ஆகியோர் அரையிறுதிக்கு தகுதி பெற்றனர்.
பள்ளி முதல்வர் வெங்கடேஷ்வரன் இறுதி போட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்கு, பரிசுகளை வழங்கினார்.
கீர்த்திமான் அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி: கணுவாயில் உள்ள இப்பள்ளியில், நடந்த தகுதி சுற்றில் பங்கேற்ற 50 மாணவர்களில், 16 பேர் எட்டு அணிகளாக பிரிந்து, பள்ளி அளவிலான இறுதிசுற்றில் பங்கேற்றனர். இதில், 'ஏ' அணியின் முகிலன், சர்வேஷ் ஆகியோர் அரையிறுதிக்கு தகுதி பெற்றனர்.
பள்ளி தாளாளர் கோகுலகிருஷ்ணன், முதல்வர் ஜெபசெல்வின் இறுதி போட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்கு, பரிசுகளை வழங்கினார்.
மாணவர்களின் சிந்தனையாற்றல், பொது அறிவு மற்றும் படிப்பின் மீது ஆர்வத்தை ஊக்குவிக்க, 'தினமலர்' சார்பில் இத்தகைய வினாடி-வினா போட்டிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.
கோவை, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் இப்போட்டியில், தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
சத்யா ஏஜென்சிஸ் மற்றும் ஸ்போர்ட்ஸ் லேண்ட் ஆகியவை, கிப்ட் ஸ்பான்சர்களாக இணைந்துள்ளன.

