/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோகுலம் காலனியில் ஆக்கிரமிப்பு அகற்ற கமிஷனர் அறிவுறுத்தல்
/
கோகுலம் காலனியில் ஆக்கிரமிப்பு அகற்ற கமிஷனர் அறிவுறுத்தல்
கோகுலம் காலனியில் ஆக்கிரமிப்பு அகற்ற கமிஷனர் அறிவுறுத்தல்
கோகுலம் காலனியில் ஆக்கிரமிப்பு அகற்ற கமிஷனர் அறிவுறுத்தல்
ADDED : பிப் 05, 2025 11:03 PM
கோவை: கோவை, பாப்பநாயக்கன்புதுார் அருகே கோகுலம் காலனியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் உத்தரவிட்டார்.
கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்துக்கு உட்பட்ட வார்டு பகுதிகளில் கமிஷனர் நேற்று கள ஆய்வு செய்தார். பாப்பநாயக்கன்புதுார் கோகுலம் காலனியில் உள்ள மாநகராட்சி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு செய்த அவர், மருந்து, மாத்திரை இருப்பு, நோயாளிகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை விபரங்களை கேட்டறிந்தார்.
இம்மருத்துவமனைக்கு செல்லும் வழித்தடம் குறுகலாக இருந்தது.
உடனடியாக அளவீடு செய்தபோது, 6 அடி ஆக்கிரமிப்பில் இருந்தது தெரியவந்தது. ஆக்கிரமிப்பாளர்களுக்கு உடனடியாக நோட்டீஸ் அனுப்பி, இடத்தை மீட்க, நகரமைப்பு பிரிவினருக்கு கமிஷனர் உத்தரவிட்டார்.
இதேபோல், என்.எஸ்.ஆர்., ரோடு மற்றும் தடாகம் ரோடு சந்திப்பு சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் சாலை விரிவாக்கம் செய்ய வேண்டும். நிலஅளவைத்துறையின் பதிவேடுகளை ஆய்வு செய்து, ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து, அகற்ற வேண்டுமென உத்தரவிட்டார்.
ஆர்.எஸ்.புரம் மேற்கு மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், தனியார் பங்களிப்புடன் ரூ.75 லட்சத்தில் கட்டப்படும் கலையரங்கப் பணியை கமிஷனர் பார்வையிட்டார்.
அதன்பின், சுண்டப்பாளையம் - தொண்டாமுத்துார் ரோட்டை இணைக்கும் வகையில், மாநகராட்சி பொது நிதியில் ரூ.23 லட்சத்தில் சிறுபாலம் கட்டுவதை ஆய்வு செய்த அவர், கட்டுமான பணியை தரமாக மேற்கொள்ள அறிவுறுத்தினார்.
அப்போது, மேற்கு மண்டல தலைவர் தெய்வயானை, உதவி கமிஷனர் துரைமுருகன், உதவி நிர்வாக பொறியாளர் சபிதா, உதவி நகரமைப்பு அலுவலர் மகேந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

