sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

தேங்காய், வாழைத்தார் ஆனைமலையில் ஏலம்

/

தேங்காய், வாழைத்தார் ஆனைமலையில் ஏலம்

தேங்காய், வாழைத்தார் ஆனைமலையில் ஏலம்

தேங்காய், வாழைத்தார் ஆனைமலையில் ஏலம்


ADDED : மார் 01, 2024 11:23 PM

Google News

ADDED : மார் 01, 2024 11:23 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆனைமலை;ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், உரித்த தேங்காய் மற்றும் வாழைத்தார் ஏலம் நடந்தது.

ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், இ - நாம் வாயிலாக மட்டை உரித்த தேங்காய் மற்றும் வாழைத்தார் ஏலம் நடந்தது. ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் செந்தில்முருகன் தலைமை வகித்தார்.

தேங்காய் ஏலத்தில், 26 தேங்காய் மூட்டைகள் வரத்து இருந்தது. அதில், கிலோவுக்கு அதிகபட்சமாக, 28 ரூபாய்க்கு விற்றது. மூன்று விவசாயிகள், இரண்டு வியாபாரிகள் பங்கேற்றனர். 11,724 ரூபாய் மதிப்புள்ள, 7.89 குவிண்டால் தேங்காய்கள் விற்கப்பட்டது.

வாழைத்தார் ஏலத்தில், மொத்தம், 32 வாழைத்தார்கள் வந்தன. கிலோவுக்கு செவ்வாழை, 54 ரூபாய்க்கு விற்றது. மொத்தம், 15,514 ரூபாய் மதிப்பிலான வாழைத்தார்கள் ஏலம் விடப்பட்டது.

ஒவ்வொரு வாரமும் ஏலம் நடப்பதால், விவசாயிகள் இடைத்தரகர்கள் தலையீடு இல்லாமல், தேங்காய் மற்றும் வாழைத்தார் விற்பனை செய்கின்றனர். ஏலம் முடிந்ததும், வங்கி கணக்கில் பணம் பட்டுவாடா செய்யப்படுகிறது என, அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us