தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தீவிரவாத தாக்குதலை கண்டித்து பா.ஜ., போராட்டம்

தீவிரவாத தாக்குதலை கண்டித்து பா.ஜ., போராட்டம்

தீவிரவாத தாக்குதலை கண்டித்து பா.ஜ., போராட்டம்


ADDED : மே 06, 2025 11:07 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 06, 2025 11:07 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சூலுார்: காஷ்மீர் பஹல்காமில், சுற்றுலா பயணிகளை சுட்டு கொன்ற, பயங்கரவாத தாக்குதலை கண்டித்து, சூலுாரில் பா.ஜ., வினர் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தினர்.

காஷ்மீர் பஹல்காம் பகுதியில், 26 சுற்றுலா பயணிகளை, பயங்கரவாதிகள் சுட்டு கொலை செய்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலை கண்டித்தும், தமிழகத்தில் உள்ள பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் நாட்டினரை வெளியேற்ற வலியுறுத்தியும், கோவை வடக்கு மாவட்ட பா.ஜ., சார்பில் சூலுாரில் கவன ஈர்ப்பு போராட்டம் நடந்தது.

கோவை வடக்கு மாவட்ட தலைவர் மாரிமுத்து தலைமை வகித்தார். கோவை தெற்கு மாவட்ட முன்னாள் தலைவர் வசந்த ராஜன், மாவட்ட நிர்வாகிகள் கோபால்சாமி, சத்தியமூர்த்தி, சிதம்பரம் உள்ளிட்ட பலர் பங்கேற்று பேசினர்.

நிர்வாகிகள் பேசுகையில்,' தீவிரவாதிகள் திட்டமிட்டு, 26 அப்பாவி பொதுமக்களை சுட்டு கொலை செய்தது கண்டிக்கத்தக்கது. அக்கொடியவர்களை கண்டுபிடித்து தக்க தண்டனை கொடுக்க மத்திய அரசு தீவிரமாக உள்ளது. அவர்களுக்கு உதவியவர்களும் தண்டிக்கப்பட வேண்டும்.

தமிழகத்தில் பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் நாட்டினரை கண்டறிந்து, உடனடியாக வெளியேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us