sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பீட்ரூட் செழிக்க தரமான விதை தேவை; தோட்டக்கலைத்துறைக்கு கோரிக்கை

/

பீட்ரூட் செழிக்க தரமான விதை தேவை; தோட்டக்கலைத்துறைக்கு கோரிக்கை

பீட்ரூட் செழிக்க தரமான விதை தேவை; தோட்டக்கலைத்துறைக்கு கோரிக்கை

பீட்ரூட் செழிக்க தரமான விதை தேவை; தோட்டக்கலைத்துறைக்கு கோரிக்கை


ADDED : மார் 09, 2024 07:36 AM

Google News

ADDED : மார் 09, 2024 07:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை,: பீட்ரூட் சாகுபடிக்கு தேவையான விதைகளை, தோட்டக்கலைத்துறை வாயிலாக நேரடியாக விவசாயிகளுக்கு வினியோகிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உடுமலை மற்றும் சுற்றுப்பகுதிகளில் களிமண் விளைநிலங்களில் கிணற்றுப்பாசனத்துக்கு, பீட்ரூட் அதிகளவு சாகுபடி செய்யப்படுகிறது.

கணபதிபாளையம், ராகல்பாவி, விருகல்பட்டி, தீபாலபட்டி, மொடக்குபட்டி, கொங்கல்நகரம் உள்ளிட்ட பகுதிகளில் ஆண்டு முழுவதும் குறிப்பிட்ட இடைவெளியில் இச்சாகுபடியை மேற்கொள்கின்றனர்.

மலைப்பகுதியில் மட்டும் விளைந்த பீட்ரூட்டை, விவசாயிகள் சமவெளிப்பகுதியிலும் தங்கள் அனுபவத்தால், விளைவித்து வருகின்றனர்.

ஆனால், கடந்த சில ஆண்டுகளாக பீட்ரூட் சாகுபடியில் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டு வருகிறது.

சில நேரங்களில், தரமில்லாத விதையால், விளைச்சல் முற்றிலுமாக குறைந்து விடுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். ஏக்கருக்கு சராசரியாக, 14 டன் வரை கிடைத்து வந்த விளைச்சல், ஆறு டன்னாக குறைந்துள்ளது.

விவசாயிகள் கூறியதாவது: பீட்ரூட் சாகுபடிக்கு விதைத்தேர்வு செய்வதில், குழப்பம் ஏற்படுகிறது. விதை நடவு செய்தபின், முளைக்காத இடங்களில் மீண்டும் விதை நடப்படும்.

பல முறை தவறிய பயிர் நடவு மேற்கொள்ள வேண்டியுள்ளது. வேளாண் பல்கலை., யின், விதைகளை பெற்று தோட்டக்கலைத்துறை வாயிலாக நேரடியாக வினியோகம் செய்யலாம்.

சாகுபடியில் சொட்டு நீர் பாசனம் உட்பட புதிய முறைகளை செயல்படுத்தி வருகிறோம். இவ்வாறு, தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us